மேலும் அறிய
சர்வதேச போட்டியில் அதிரடி காட்டிய கிறிஸ்டியானோ ரொனால்டோ!
நேற்று நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் யூஎஸ்ஏ அணிக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தின் போக்கையும் போர்ச்சுக்கல் அணியின் வெற்றியையும் தீர்மானித்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
1/6

கால்பந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று யுரோப்பியன் 2024 சாம்பியன் தகுதி சுற்றில் கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ள போர்ச்சுக்கல் அணியும் யுஎஸ்ஏ கால்பந்தாட்ட அணியும் நேற்று மோதின.
2/6

இந்தப் போட்டியில் போர்ச்சுக்கல் அணி மூன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் யூஎஸ்ஏ அணியை வீழ்த்தியது. ‘ரொனால்டோவின் சகாப்தம் முடிந்து விட்டது. அவரின் பாட்ஷா யுரோப்பில் பலிக்காததால் அவர் சவுதி லீகில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறார்’ என பலர் விமர்சித்தனர்.
3/6

ரொனால்டோ சவுதி கால்பந்து லீகின் உயரிய சேம்பியன் பட்டமான சவுதி லீக் சாம்பியன்ஷிப் பட்டத்தை அல்நாசர் அணிக்காக விளையாடி பெற்றுத் தந்தார். இவரால், கிரிக்கெட் கிரிக்கெட் என சுற்றி வந்தவர்களும் கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
4/6

இதற்கிடையில் நேற்று நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட போட்டியில் யூஎஸ்ஏ அணிக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தின் போக்கையும் போர்ச்சுக்கல் அணியின் வெற்றியையும் தீர்மானித்தார்.
5/6

‘அவருக்கு வயது 38 ஆகிவிட்டது. ரொனால்டோவின் பயணம் முடிய போகிறது’என்ற விமர்சனங்களுக்கு அவரின் பைசைக்கிள் கிக் முற்றுப்புள்ளி வைத்தது. இதற்கு மத்தியில் யூரோ சாம்பியன்ஸ் லீகில் போர்ச்சுக்கல் அணி தகுதி பெற்றுள்ளது.
6/6

யூரோ லீக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் திமிரி எழுவார் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Published at : 14 Oct 2023 04:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion