மேலும் அறிய

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம்! எடப்பாடியார் சூளுரை

வேளாண் குடி மக்களான உங்களது ஆதரவுடன் ஆட்சிக்கு வந்ததும், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுமையாக முடிக்கப்படும். இரண்டாம் கட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் உங்கள் மனக்குறை எல்லாமே தீர்க்கப்படும்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் இரண்டாம் கட்டம் முடிக்கப்படும்- விவசாயிகள், நெசவாளர்கள் மத்தியில் புரட்சித் தமிழர் எடப்பாடியார் சூளுரை.

'மக்களைக் காப்போம், தமிழகம் மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தில், 'புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்' என்ற தேர்தல் சுற்றுப்பயணத்தை கழக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கியிருக்கிறார்.

இந்த பயணம் குறித்து எடப்பாடியார், ‘’மேட்டுப்பாளையம் மட்டுமின்றி கோவை மாவட்டத்திலேயே பிரசித்தி பெற்ற கோயிலான வனபத்ரகாளியம்மனை நேரில் தரிசித்துவிட்டு, எனது சுற்றுப்பயணத்தைத் துவக்கினேன். துவக்க நிகழ்விலேயே கழக தொண்டர்களும், நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தது மட்டற்ற மகிழ்ச்சி. வனபத்ரகாளியம்மனின் துணை நமக்கு என்றென்றும் இருக்கும்.

தரிசனத்தை முடித்தகையோடு அருகாமையில் அமைந்துள்ள அம்மை அப்பன் மண்டபத்தில், விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தேன். ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு விதமான கோரிக்கைகளை முன்வைத்தனர். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக எனக்கு வேளாண் குடி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அவர்களுக்கு பதிலளித்து நான் பேசியபோது, "அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் இரண்டு கட்டமாக அதனை மாற்றியமைத்து செயல்படுத்தத் தொடங்கினோம். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாசனம் பெறுகின்ற ஒரு ஏக்கர் கூட விடுபட்டிடாத அளவுக்கு திட்டத்தை வடிவமைத்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்காண்டுகள் கடந்தும் முதல் கட்டப் பணிகள் மட்டுமே முடிந்திருக்கிறது. அதிமுக திட்டம் என்பதால் கிடப்பில் போட்டுவிட்டது விடியா திமுக ஆட்சி. மீண்டும் வேளாண் குடி மக்களான உங்களது ஆதரவுடன் ஆட்சிக்கு வந்ததும், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுமையாக முடிக்கப்படும். இரண்டாம் கட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் உங்கள் மனக்குறை எல்லாமே தீர்க்கப்படும்.

கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் உள்ள 6000க்கும் மேற்பட்ட ஏரிகளில் தூர்வாரபட்டது. நானும் ஒரு விவசாயி தான், தற்போதும் நான் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் தான் என்னை எதுவும் செய்யமுடியவில்லை. 

ஒரு பிள்ளையை தாய் எவ்வாறு பாதுகாக்கிறாரோ, அதேபோல் தான் விவசாயிகள் பயிர்களை பாதுகாக்கிறார்கள். மேலும், சொட்டுநீர் பாசனம் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக தான். 25 சதவீத மானியம் கொடுத்து, மத்திய அரசிடம் நிதி பெற்று அந்தத் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினேன்.

கால்நடை மருத்துவக் கல்லூரிகள் நிறுவிப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். நான் அமரிக்கா சென்றபோது, அங்கு பஃபலோ நகருக்குச் சென்று ஆய்வுசெய்து, அதனை இங்கு வந்து தமிழகத்தில் பசு ஆராய்ச்சி மையம் தொடங்கினேன். கலப்பின பசுவை உருவாக்கி, பால் உற்பத்தியை அதிகப்படுத்தவே அந்த முயற்சியை மேற்கொண்டோம். ஆடு, மீன், பன்றி, கோழி வளர்ப்பு எல்லாமே அங்கு மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது. விவசாயிகளை நேரடியாக அழைத்துச்சென்று பயிற்சி அளிக்க முயற்சித்தோம். ஆட்சி மாற்றத்தில் எல்லாம் கிடப்பில் போடப்பட்டது. பசுக்களை இலவசமாக விவசாயிகளுக்கு கொடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி என்பதை மறந்துவிடாதீர்கள்.

மும்மனை மின்சாரம் இலவசமாக வழங்கியது அதிமுக ஆட்சியில்தான். வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்ததும் அதிமுக ஆட்சி தான். வனவிலங்குகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் பாதிப்புகளை உடனடியாக அரசு அதிகாரிகள் மூலம் மதிப்பீடு செய்து, அதன் இழப்பீட்டை நான் முதலமைச்சராக இருந்தபோது கொடுத்தேன். இங்கு அரசியல் பேசக்கூடாது என்று தான் நினைத்தேன் எனினும் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

திமுக ஆட்சியில் நான்கு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால், வேளாண் விவசாயிகள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் பசுமை வீடு கட்டி கொடுக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் இருந்தபோது தான், அண்டை மாநிலமான கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நதிநீர் பிரச்சினையைத் தீர்க்க வழி வகுத்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நதிநீர் பிரச்சினை குறித்து விளம்பர ஸ்டாலின் மாடல் அரசு பேசவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை. நீர் சுத்தகரிப்பு திட்டத்திற்காக 11,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2019ம் ஆண்டில் நான் முதலமைச்சராக இருந்தபோது பாரதப் பிரதமரை சந்தித்து, ’நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டத்தை விளக்கி, அதற்கான நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதிமுக அரசாங்கம் என்பது மக்களுக்கான அரசாங்கம், விவசாயிகளுக்கான அரசாங்கம். இதில் மாற்றுக்கருத்து இல்லை. எப்போதும் நாங்கள் விவசாயிகள் உடனும், மக்களுடனும் தான் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொண்டு, விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் என அனைவரும் தெரிவித்த கருத்துகள் மற்றும் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்களை, அதிமுக ஆட்சி அமைந்ததும் தக்க நடவடிக்கை எடுத்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’ என்று உறுதி அளித்திருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நூற்றுக்கணக்கான தேனீக்கள் தாக்குதல்… ஆனாலும் தேனை விடாது ருசித்த கில்லாடி கரடி...
நூற்றுக்கணக்கான தேனீக்கள் தாக்குதல்… ஆனாலும் தேனை விடாது ருசித்த கில்லாடி கரடி...
“விஜய் வந்தது மகிழ்ச்சி” – அரசியல் மாற்றம் குறித்து நடிகர் சிவக்குமார் அதிரடி கருத்து...
“விஜய் வந்தது மகிழ்ச்சி” – அரசியல் மாற்றம் குறித்து நடிகர் சிவக்குமார் அதிரடி கருத்து...
coimbatore power cut: கோவையில் நாளை (29-05-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் வெளியானது
கோவையில் நாளை (29-05-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் வெளியானது
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget