மேலும் அறிய

திருவாரூரில் 40,000 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு - ஏக்கருக்கு 30,000 நிவாரணம் வழங்க கோரிக்கை

’’மீண்டும் பயிர் சாகுபடி மேற்கொள்ள வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உத்தரவாதம் இன்றி பயிர்கடன் வழங்க கோரிக்கை’’

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 13 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் மிகுந்த கவலை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருந்தனர்.

திருவாரூரில் 40,000 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு - ஏக்கருக்கு 30,000 நிவாரணம் வழங்க கோரிக்கை
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மழை பெய்யாத நிலையில் தற்பொழுது விவசாய நிலத்தில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மழை விட்ட பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டார். அப்பொழுது பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது அவர்கள் ஆய்வு செய்து தரும் அறிக்கையின் படி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் கிராமங்கள் வாரியாக அனைத்து பகுதிகளிலும் வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து பயிர் பாதிப்பு குறித்த ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூரில் 40,000 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு - ஏக்கருக்கு 30,000 நிவாரணம் வழங்க கோரிக்கை
 
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக 40 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிர்களிலிருந்து பயிர் விளைச்சல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பயிர்கள் முழுமையாக அழகி உள்ளது. இரண்டாவது முறையாக நெல் நடவு அல்லது தெளித்தால் மூலமே சாகுபடி பணிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஈடுபட முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் அந்த பயிர்கள் அனைத்தும் அழிந்து உள்ள காரணத்தினால் மீண்டும் செலவு செய்வதற்கு விவசாயிகளிடையே பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ள காரணத்தினால் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக நிபந்தனை இல்லாமல் கடன் வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Trump Vs Zelensky: “ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
“ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
Toyota Discounts: ஃபயர் மோடில் டொயோட்டா.. ரூ.13.67 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசி அதகளம் - இன்னோவா To ஹைரைடர்
Toyota Discounts: ஃபயர் மோடில் டொயோட்டா.. ரூ.13.67 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசி அதகளம் - இன்னோவா To ஹைரைடர்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Trump Vs Zelensky: “ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
“ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
Toyota Discounts: ஃபயர் மோடில் டொயோட்டா.. ரூ.13.67 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசி அதகளம் - இன்னோவா To ஹைரைடர்
Toyota Discounts: ஃபயர் மோடில் டொயோட்டா.. ரூ.13.67 லட்சம் வரை சலுகைகளை அள்ளி வீசி அதகளம் - இன்னோவா To ஹைரைடர்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Embed widget