மேலும் அறிய

இத்தனை பேர் ஆப்சென்ட்டா... குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 6959 பேர் எழுதலையாம்

அனைத்து மையங்களிலும் போலீசார் பாதுகாப்பணியில் பணியமடுத்தப்பட்டனர். இன்று நடைபெற்ற தேர்வில் 6,959 பேர்கள் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வை 36,558 பேர் எழுதினர். 6,959 பேர் எழுதவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குரூப் 4 தேர்வு வரும் இன்று நடைபெற்றது. குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை கடந்த 2ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தவர்களுக்கு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது.

இத்தனை பேர் ஆப்சென்ட்டா... குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 6959 பேர் எழுதலையாம்

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு  215 காலியிடங்கள், ஜூனியர் உதவியாளர் பணிக்கு  1,621 காலியிடங்கள், ஜூனியர் உதவியாளர்  11 காலியிடங்கள், ஜூனியர் உதவியாளர்  46 காலியிடங்கள், ஜூனியர் வருவாய் ஆய்வாளர் பணிக்கு  239 காலியிடங்கள், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (அலுவலகம்) பணிக்கு  1 காலியிடம், ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட் பணிக்கு  2 காலியிடங்கள், தட்டச்சர் பணிக்கு  1,100 காலியிடங்கள், ஸ்டெனோ டைப்பிஸ்ட் (கிரேடு - III) பணிக்கு  368 காலியிடங்கள், தனிப்பட்ட எழுத்தர் பணிக்கு  2 காலியிடங்கள், உதவியாளர் பணிக்கு  54 காலியிடங்கள், கள உதவியாளர் பணிக்கு  19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது.

மேலும் வனக் காவலர் பணிக்கு 62 காலியிடங்கள், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காவலர் பணிக்கு  35 காலியிடங்கள், வனக் கண்காணிப்பாளர் பணிக்கு  71 காலியிடங்கள், வனக் கண்காணிப்பாளர் (பழங்குடி இளைஞர்) பணிக்கு  24 காலியிடங்கள், வனக் காவலர் பணிக்கு  15 காலியிடங்கள் (கூடுதல் பட்டியல்), வனக் கண்காணிப்பாளர் பணிக்கு  50 காலியிடங்கள் (கூடுதல் பட்டியல்) என மொத்தம் 3,935 காலி பணியிடங்களுக்கு அலுவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள்.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் 43,517 பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் தஞ்சாவூரில் 49, பூதலூரில் 11, கும்பகோணத்தில் 34, ஒரத்தநாட்டில் 9, பாபநாசத்தில் 8, பட்டுக்கோட்டையில் 23, பேராவூரணியில் 7, திருவையாறு 9, திருவிடைமருதூரில் 5 என மொத்தமாக  155 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது.

விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வருகை தர வேண்டும். தேர்வு மையத்திற்குள் செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் அடுத்து வர அனுமதி இல்லை. கருப்பு பந்து முனை பேனாவை பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் முழுமையான சோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறுகிறதா என கண்காணிக்க மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு அதிகாரிகள் 40 பேரும், பறக்கும் படை அதிகாரிகள் 16 பேரும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அனைத்து மையங்களிலும் போலீசார் பாதுகாப்பணியில் பணியமடுத்தப்பட்டனர். இன்று நடைபெற்ற தேர்வில் 6,959 பேர்கள் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப் 4 தேர்வை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா, தாசில்தார் சிவகுமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

தலைப்பு செய்திகள்

என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!
மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
Tata SUV: EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Compact EV: மூன்று SUV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் EV - தேறுமா?
மூன்று EV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் SUV - தேறுமா?
Embed widget