மேலும் அறிய

இத்தனை பேர் ஆப்சென்ட்டா... குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 6959 பேர் எழுதலையாம்

அனைத்து மையங்களிலும் போலீசார் பாதுகாப்பணியில் பணியமடுத்தப்பட்டனர். இன்று நடைபெற்ற தேர்வில் 6,959 பேர்கள் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற குரூப் 4 தேர்வை 36,558 பேர் எழுதினர். 6,959 பேர் எழுதவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குரூப் 4 தேர்வு வரும் இன்று நடைபெற்றது. குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை கடந்த 2ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தவர்களுக்கு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு அறிவிக்கப்பட்டது.

இத்தனை பேர் ஆப்சென்ட்டா... குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 6959 பேர் எழுதலையாம்

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு  215 காலியிடங்கள், ஜூனியர் உதவியாளர் பணிக்கு  1,621 காலியிடங்கள், ஜூனியர் உதவியாளர்  11 காலியிடங்கள், ஜூனியர் உதவியாளர்  46 காலியிடங்கள், ஜூனியர் வருவாய் ஆய்வாளர் பணிக்கு  239 காலியிடங்கள், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (அலுவலகம்) பணிக்கு  1 காலியிடம், ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட் பணிக்கு  2 காலியிடங்கள், தட்டச்சர் பணிக்கு  1,100 காலியிடங்கள், ஸ்டெனோ டைப்பிஸ்ட் (கிரேடு - III) பணிக்கு  368 காலியிடங்கள், தனிப்பட்ட எழுத்தர் பணிக்கு  2 காலியிடங்கள், உதவியாளர் பணிக்கு  54 காலியிடங்கள், கள உதவியாளர் பணிக்கு  19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது.

மேலும் வனக் காவலர் பணிக்கு 62 காலியிடங்கள், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காவலர் பணிக்கு  35 காலியிடங்கள், வனக் கண்காணிப்பாளர் பணிக்கு  71 காலியிடங்கள், வனக் கண்காணிப்பாளர் (பழங்குடி இளைஞர்) பணிக்கு  24 காலியிடங்கள், வனக் காவலர் பணிக்கு  15 காலியிடங்கள் (கூடுதல் பட்டியல்), வனக் கண்காணிப்பாளர் பணிக்கு  50 காலியிடங்கள் (கூடுதல் பட்டியல்) என மொத்தம் 3,935 காலி பணியிடங்களுக்கு அலுவலர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள்.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் 43,517 பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் தஞ்சாவூரில் 49, பூதலூரில் 11, கும்பகோணத்தில் 34, ஒரத்தநாட்டில் 9, பாபநாசத்தில் 8, பட்டுக்கோட்டையில் 23, பேராவூரணியில் 7, திருவையாறு 9, திருவிடைமருதூரில் 5 என மொத்தமாக  155 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது.

விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வருகை தர வேண்டும். தேர்வு மையத்திற்குள் செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் அடுத்து வர அனுமதி இல்லை. கருப்பு பந்து முனை பேனாவை பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் முழுமையான சோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறுகிறதா என கண்காணிக்க மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு அதிகாரிகள் 40 பேரும், பறக்கும் படை அதிகாரிகள் 16 பேரும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அனைத்து மையங்களிலும் போலீசார் பாதுகாப்பணியில் பணியமடுத்தப்பட்டனர். இன்று நடைபெற்ற தேர்வில் 6,959 பேர்கள் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப் 4 தேர்வை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா, தாசில்தார் சிவகுமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
CBSE Exam Result Date: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? 5 வழிகளில் பார்க்கலாம்- எங்கு, எப்படி?
CBSE Exam Result Date: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? 5 வழிகளில் பார்க்கலாம்- எங்கு, எப்படி?
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
Mahindra Thar Price Hike: தார் SUV பிரியர்களுக்கு அதிர்ச்சி.! மீண்டும் விலையை உயர்த்திய மஹிந்திரா; அதுக்காக இவ்வளவா.?
தார் SUV பிரியர்களுக்கு அதிர்ச்சி.! மீண்டும் விலையை உயர்த்திய மஹிந்திரா; அதுக்காக இவ்வளவா.?
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Anbumani: திமுகவுக்கு வன்னியர்கள், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கி மட்டும்தான்; சாடிய அன்புமணி
Anbumani: திமுகவுக்கு வன்னியர்கள், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கி மட்டும்தான்; சாடிய அன்புமணி
Embed widget