மேலும் அறிய

"இவர்கள்தான் இந்தியாவின் மிகப்பெரிய மூலதனம்" யாரை சொல்கிறார் பிரதமர் மோடி?

தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொலி காட்சி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

"இவர்கள்தான் இந்தியாவின் மிகப்பெரிய மூலதனம்"

பின்னர் பேசிய அவர், உலகின் மிகப்பெரிய இளைஞர் மக்கள்தொகை மற்றும் மிகப்பெரிய ஜனநாயகத்தைக் கொண்ட இந்தியா, உள்நாட்டிலும் உலக அரங்கிலும் எதிர்காலத்தை வடிவமைக்கும் தனித்துவமான ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.

இந்த மகத்தான இளைஞர் சக்தி இந்தியாவின் மிகப்பெரிய மூலதனம் என்றும், இந்த மூலதனத்தை நீண்டகால செழிப்புக்கான ஊக்கியாக மாற்றுவதற்கான முயற்சிகளில் அரசு உறுதியாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

“இரண்டு நாட்களுக்கு முன்பு, ஐந்து நாடுகளுக்குச் சென்று திரும்பினேன். நான் பார்வையிட்ட ஒவ்வொரு நாட்டிலும், இந்திய இளைஞர்களின் வலிமை வலுவாக எதிரொலித்தது. இந்தச் சுற்றுப்பயணத்தின் போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்திய இளைஞர்களுக்கு பயனளிக்கும்” என்று மோடி கூறினார்.

என்ன பேசினார் பிரதமர் மோடி?

பாதுகாப்பு, மருந்துகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் அரிய தாதுக்கள் போன்ற முக்கியமான துறைகளில் இந்த சுற்றுப்பயணத்தின் போது கையெழுத்தான பல்வேறு ஒப்பந்தங்கள் நீண்டகால நன்மைகளை உருவாக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

“இந்த முயற்சிகள் இந்தியாவின் உலகளாவிய பொருளாதார நிலையை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உற்பத்தி மற்றும் சேவைகள் இரண்டிலும் இளம் இந்தியர்களுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளையும் உருவாக்கும்” என்று மோடி கூறினார்.

வேலைவாய்ப்புகளின் வளர்ந்து வரும் நிலை பற்றி உரையாற்றிய பிரதமர், 21 ஆம் நூற்றாண்டில் வேலைகளின் தன்மை விரைவான மாற்றத்திற்கு உள்ளாகி வருவதாக எடுத்துரைத்தார். புதுமை, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இளைஞர்கள் பெரிய கனவுகளைக் காண அதிகாரம் அளிக்கும் இந்தியாவில் வளர்ந்து வரும் சூழல் அமைப்பைப் பற்றி அவர் பேசினார்.

புதிய தலைமுறையினர் மீது தனக்குள்ள தனிப்பட்ட பெருமையையும் நம்பிக்கையையும் பகிர்ந்து கொண்ட அவர், இளைஞர்கள் லட்சியம், தொலைநோக்கு பார்வை மற்றும் புதிய ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற வலுவான விருப்பத்துடன் முன்னேறுவதைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தனியார் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மோடி கூறினார். சமீபத்தில், வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு அங்கீகரித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், தனியார் துறையில் முதல் வேலை பெறும் இளைஞர்களுக்கு அரசு ரூ 15,000 வழங்கும். "வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்களின் முதல் வேலையின் முதல் சம்பளத்திற்கு அரசு பங்களிக்கும். இதற்காக, அரசு சுமார் ரூ 1 லட்சம் கோடி பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டம் சுமார் 3.5 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று மோடி மேலும் கூறினார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget