மேலும் அறிய

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: இந்தியாவில் இரவு நேர ஊரடங்கா? - பிரதமர் மோடி இன்று ஆலோசனை

ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரிப்பு குறித்து பிரதமர் மோடி இன்று சுகாதாரத்துறை நிபுணர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட உலக நாடுகள் மெல்ல தங்களது இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சூழலில், கடந்த நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை பரவி வந்த கொரோனா, டெல்டா வைரஸ்களை காட்டிலும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பும், மருத்துவ சுகாதார வல்லுனர்களும் தீவிரமாக எச்சரித்தனர்.


ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: இந்தியாவில் இரவு நேர ஊரடங்கா? - பிரதமர் மோடி இன்று ஆலோசனை

தென்னாப்பிரிக்காவில் இருந்து மற்ற நாடுகளுக்கு படிப்படியாக பரவிய ஒமிக்ரான் வைரசின் பாதிப்பு இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடந்த நான்கு நாட்களில் மட்டும் இந்தியாவில் ஒமிக்ரான் வைரசின் பாதிப்பு இரு மடங்காகி உள்ளது. ஒமிக்ரான் வைரஸ் மட்டுமின்றி டெல்டா வைரசின் தாக்கமும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி மருத்துவ வல்லுனர்கள், சுகாதாரத்துறை நிபுணர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனையில் ஒமிக்ரான் வைரசின் பரவல், அதன் பாதிப்பு, ஒமிக்ரான் வைரசின் தீவிரத்தன்மை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இதுமட்டுமின்றி, ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியிருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷண், அவசியம் ஏற்பட்டால் மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று அறிவுறுத்தியிருந்தார். மேலும், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகளை உறுதி செய்யுமாறும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: இந்தியாவில் இரவு நேர ஊரடங்கா? - பிரதமர் மோடி இன்று ஆலோசனை

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்தனர். அந்த நெருக்கடிகளில் இருந்தே இன்னும் பலரும் மீளாத சூழலில், மீண்டும் பிரதமர் மோடி இன்று ஊரடங்கு குறித்து ஆலோசிக்க இருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது வரை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 129 நாடுகளுக்கு பரவியுள்ளது. டெல்டா வைரசை விட மூன்று மடங்கு அதிவேகமாக பரவும் தன்மை கொண்ட வைரஸ் என்பதால் இந்த வைரசால் உலக நாடுகள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக டெல்லியில் 57 நபர்களும், மகாராஷ்ட்ராவில் 54 நபர்களும், தெலுங்கானாவில் 24 பேரும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க : Today Headlines: பிரதமர் இன்று ஆலோசனை... 500 கலைஞர் உணவகங்கள்... இந்தியாவுக்கு வெண்கலம்... இன்னும் பல!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
"முஸ்லிம்கள் மீதான உளவியல் தாக்குதல்" பாஜகவுக்கு எதிராக பொங்கி எழுந்த தவெக விஜய்
Reciprocal Tariffs: பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Leader Vijay Next Plan: நல்ல நேரம் குறிச்சாச்சு.. Operation 234! ஆட்டத்தை தொடங்கும் விஜய்!CV Shanmugam: அமித்ஷா - சி.வி.சண்முகம் சந்திப்பு.. வக்பு சட்டத்துக்கு ஆதரவா? அதிர்ச்சியில் எடப்பாடிஓசி டிக்கெட் கேட்ட கிரிக்கெட் சங்கம் காவ்யா மாறனுக்கு மிரட்டல்! HOME GROUND-ஐ மாற்றும் SRH?தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
"முஸ்லிம்கள் மீதான உளவியல் தாக்குதல்" பாஜகவுக்கு எதிராக பொங்கி எழுந்த தவெக விஜய்
Reciprocal Tariffs: பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
World Richest Person: உலக பணக்காரர்.. மீண்டும் தட்டித் தூக்கிய எலான் மஸ்க்.. அம்பானி, அதானிக்கு எந்த இடம் தெரியுமா.?
உலக பணக்காரர்.. மீண்டும் தட்டித் தூக்கிய எலான் மஸ்க்.. அம்பானி, அதானிக்கு எந்த இடம் தெரியுமா.?
Gold Rate 3rd April: வெளுத்து வாங்கும் தங்கத்தின் விலை.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.. இன்று எவ்வளவு தெரியுமா.?
வெளுத்து வாங்கும் தங்கத்தின் விலை.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.. இன்று எவ்வளவு தெரியுமா.?
Nithyananda Alive: “ஆரோக்கியமாக ஆனந்தமாக இருக்கிறேன்“ நேரலையில் வந்து புரளிகளை உடைத்த நித்யானந்தா...
“ஆரோக்கியமாக ஆனந்தமாக இருக்கிறேன்“ நேரலையில் வந்து புரளிகளை உடைத்த நித்யானந்தா...
Chennai Weather: சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய காலை மழை.. 20 மாவட்டங்களில் தொடர வாய்ப்பு...
சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய காலை மழை.. 20 மாவட்டங்களில் தொடர வாய்ப்பு...
Embed widget