Chennai Weather: சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய காலை மழை.. 20 மாவட்டங்களில் தொடர வாய்ப்பு...
Chennai Weather: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காலையிலேயே மழை பெய்த நிலையில், 20 மாவட்டங்களில் 10 மணி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், காலையிலேயே பரவலான மழை பெய்த நிலையில், 10 மணி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலையில் பரவலாக பெய்த மழை
சென்னையில் இன்று காலையிலேயே பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் வெயில் வாட்டி வந்த நிலையில், புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே மழை பெய்தது. இந்நிலையில், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், ஆலந்தூர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
இதேபோல், தென் தமிழகத்தில் சிவகங்கை, காரைக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் காலையிலேயே மழை பெய்துள்ளது. அதிகாலை மழையால், வானிலை குளிர்ச்சியாக மாறியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
20 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு - வானிலை மையம்
இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

