மேலும் அறிய

IND Vs Pak Asia Cup: ”காசு பார்க்க துடிக்கும் பிசிசிஐ” அப்பாவை கொன்ற பாகிஸ்தானின் விளையாட்டை மகன் பார்க்க வேண்டுமா?

IND Vs Pak Asia Cup: ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா களமிறங்குவதற்கு, ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

IND Vs Pak Asia Cup: இந்தியர்களை கொன்ற பாகிஸ்தானுடன் பணத்திற்காக பிசிசிஐ போட்டி நடத்துவதாக சாடி வருகின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி:

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் எல்லையில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாடுகளுக்கு இடையே பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான், ஆசிய கோப்பை போட்டிக்கான அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 14ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முடிவு வெளியானது முதலே, பாகிஸ்தான் உடன் இந்திய அணி விளையாட கூடாது என ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அப்பாவை இழந்த மகன் கிரிக்கெட் பார்க்க வேண்டுமா?

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் பேசிய ஓவைசி, “ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டியை விளையாட வைக்கும் தார்மீக நிலைப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளதா. “பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் குடும்ப உறுப்பினர்களை பாகிஸ்தானுடனான இந்தியாவின் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கச் சொல்ல உங்கள் மனசாட்சி அனுமதிக்கிறதா? தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாயாது என்று கூறி, பாகிஸ்தானுக்கான 80% தண்ணீரை நாங்கள் நிறுத்துகிறோம். ஆனால், நீங்கள் கிரிக்கெட் போட்டி விளையாடுவீர்களா? அந்த போட்டியைப் பார்க்க என் மனசாட்சி என்னை அனுமதிக்கவில்லை. இறந்த 25 பேரை அழைத்து, ஆபரேஷன் சிந்தூரில் நாங்கள் பழிவாங்கிவிட்டோம் என்று சொல்ல இந்த அரசாங்கத்திற்கு தைரியம் இருக்கிறதா? இப்போது நீங்கள் பாகிஸ்தானுடன் போட்டியைப் பார்க்கிறீர்கள். இது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம்” என காட்டாமாக பேசியுள்ளார்.

காசு பார்க்க துடிக்கும் பிசிசிஐ:

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக கூறி, முன்னாள் வீரர்களே பாகிஸ்தான் உடனான WCL போட்டியில் விளையாட மறுத்துவிட்டார்கள். ஆனால், ஆசியகோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட பிசிசிஐ முடிவு செய்துள்ளது. காரணம் WCL போட்டியில் சிறிய வருமானம் மட்டுமே கிடைக்கும். ஆனால், ஆசிய கோப்பை போட்டியில் வருமானம் அதிகம். இந்திய மக்கள் கொல்லப்பட்டு 26 குடும்பங்கள் தங்களது உறவுகளை இழந்து வாடி வருந்திக்கொண்டுள்ளது. ஆனால், பணம் மட்டுமே முக்கியம் என பிசிசிஐ செயல்படுகிறது. மக்களின் உணர்ச்சிகளை பணமாக மாற்ற தீவிரம் காட்டுகிறது” என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கங்குலி மீது அட்டாக்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பேசிய முன்னாள் கேப்டன் கங்குலி, “பஹல்காம் போன்ற தாக்குதல்கள் இனி நடக்கக் கூடாது. ஆனால், போட்டிகள் கண்டிப்பாக தொடர வேண்டும்” என வலியுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, “திருமணமாகி சில நாட்களே ஆன நிலையில், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கணவருக்கு அருகில் இடிந்துபோய் அமர்ந்திருந்த பெண்ணை மறந்துவிட்டீர்களா? தாக்குதலில் தனிப்பட்ட முறையில் நீங்கள் இழப்பைச் சந்தித்து இருந்தால் இப்படி தான் பேசுவீர்களா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதேபோன்று ஏராளமானோர் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆதரவாளர்கள் சொல்வது என்ன?

ஒரு சிலர் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு என்பது விறுப்பு, வெறுப்புகளை கடந்து வீரர்களிடையே மட்டுமின்றி, இருநாடுகளுக்கு இடையேயும் நட்பையும், சகோதரத்துவத்தையும் ஊக்குவிக்கும். இருநாடுகளும் மோதல் போக்கை கைவிடுத்து, ஒன்றாக சேர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கான முதல் படியாக விளையாட்டு இருக்கலாம் என வலியுறுத்தி வருகின்றனர்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Embed widget