முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்! உடனே அப்ளை பண்ணுங்க
நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தினை சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதிய உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

விழுப்புரம்: நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தினை சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதிய உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ளார்.
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்திற்கான விளையாட்டு நிதி
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுத்தொகை மூலம் உறுதியான மாதாந்திர வருமானம் தேவைப்படுவது மிகவும் அவசியமாகிவிட்டது. ஏனெனில், விளையாட்டு வீரர்கள் தங்கள் இளமைப் பருவத்தின் பெரும்பகுதியை தீவிர பயிற்சியில் செலவிடுகிறார்கள், பொதுவாகக் கிடைக்கும் பிற நன்மை பயக்கும் வாய்ப்புகளைத் தியாகம் செய்கிறார்கள். உறுதியான மாதாந்திர வருமானம், விளையாட்டில் அவர்களின் உயர்ந்த லட்சியத்தையும் சாதனையையும் பின்தொடர்வதில் அவர்கள் நிராகரித்த வாய்ப்புகளுக்கு ஈடுசெய்யும்.
ஒலிம்பிக் விளையாட்டுகள், காமன்வெல்த் விளையாட்டுகள், ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் ஆசிய விளையாட்டுகள், பாராலிம்பிக் விளையாட்டுகள் ஆகியவற்றில் பதக்கம் வென்றவர்களுக்கு, செயலில் உள்ள விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அல்லது அவர்கள் 30 வயதை எட்டிய பிறகு, எது பின்னர் வருகிறதோ, அதுவரை வாழ்நாள் முழுவதும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்காக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய நிதியமாகும்.
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம்
விளையாட்டு துறையில் சர்வதேச/ தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது.
குறைந்தபட்ச தகுதி:
- சர்வதேச/தேசிய போட்டிகளில் முதலிடம் /இரண்டாமிடம் /மூன்றாம் இடங்களில் வெற்றிபெற்று இருத்தல் வேண்டும்.
- சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல்.
தகுதியான விளையாட்டுப்போட்டிகள்:
- ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள்.
- அகில இந்திய பல்கலைக் கழங்களுக்கு இடையேயான போட்டிகள்.
- இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச/தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.
- ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம்/ இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச/ தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.
வயதுவரம்பு :
1. 2025-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் (30.04.2025) அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
2.விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகவும். தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
மாத வருமானம்:
விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (வருமான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் )
இவ்வாணைய இணையதளம் www.sdat.tn.gov.in- மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.07.2025 அன்று மாலை 5.00 மணி ஆகும். எனவே. மேற்கண்ட ஓய்வூதியம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (அ.பே.எண்: 7401703485) தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.





















