மேலும் அறிய

பெண்கள் கல்லூரி வகுப்பறையில் இரத்தக்கறைகள்..! வெளிவந்த உண்மை..! நடந்தது என்ன?

”இச்சம்பவம் தொடர்பாக விக்னேஷ் என்ற இளைஞர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவத்தில் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி வகுப்பறையில் இரத்தக்கறைகள்

நெல்லை பழைய பேட்டை பகுதியில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் 15க்கும் மேற்பட்ட பாட பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 4,500  மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு  நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்திலிருந்து ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்த நிலையில் இக்கல்லூரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இளங்கலை வணிகவியல் பாடப் பிரிவுக்கான வகுப்பறையில் ரத்தக் கறைகள் சிந்தி கிடந்ததைக் கண்டு மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அலுவலகத்திற்குச் சென்று ஆசிரியர்களிடம் தகவலை தெரிவித்தனர். அதன்படி, கல்லூரி நிர்வாகம் சார்பில், பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்திலிருந்து தடயங்களைச் சேகரித்தனர். குறிப்பாக, வகுப்பறையில் சிந்திக் கிடந்த ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டது.

தீவிர விசாரணையில் காவல்துறையினர்

தொடர்ந்து அந்த ரத்தக்கறைகள் மனிதர்களுடையதா அல்லது விலங்குகளுடையதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றது. முதலில் விலங்களுடையதாக இருக்கக்கூடும் என்று சொல்லப்பட்ட  நிலையில் அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியது. அதில் கல்லூரி வகுப்பறையில் ஏதோ நடந்துள்ளது என்பது வீடியோ  காட்சிகள் மூலம் பல கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக வகுப்பறையில் பெஞ்சிற்கு கீழே இரத்த கறைகள் அதிகம் இருந்த நிலையில் அதனை பேப்பரால் துடைத்து அங்குள்ள குப்பைக் கூடையில்  போடப்பட்டிருந்ததோடு அங்குள்ள ஸ்விட்ச் போடுகளிலும் இரத்த கறைகள் படிந்திருந்தது. அதன்பின்பு அது மனிதர்களுடையதாக இருக்கக்கூடும் என்றும், அப்படியென்றால் அங்கு நடந்தது என்ன என்பது குறித்தும் உண்மையான தகவல் வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கல்லூரியில் கட்டிட வேலை பார்த்து வரும் காரைக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற நபரை பிடித்து விசாரித்து வந்தனர். அந்த விசாரணையில், விக்னேஷ் ஒருதலைக்காதல் விவகாரத்தில் தன்னைத்தானே பிளேடால் கையை வகுப்பறையில் வைத்து அறுத்துக் கொண்டது தெரிய வந்துள்ளது.

உண்மை வெளிவந்தது எப்படி?

ரத்தக்கறை கிடப்பதாக தகவல் கிடைத்த  போலீசார் கல்லூரி முழுவதும் விசாரணை நடத்தினர். குறிப்பாக, அனைத்து வகுப்புகளுக்கும் சென்று மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.  ரத்தக்கறை கண்டுபிடிக்கப்பட்ட முந்தைய நாள் ஞாயிறு விடுமுறை என்பதால், அன்று மாணவிகள் வகுப்பறையில் இருக்க வாய்ப்பில்லை. எனவே, வேறு நபர்கள் உள்ளே வந்தார்களா என்பதையும் ஆய்வு செய்தனர். அப்போது தான் கல்லூரியில் கட்டிட வேலை நடந்து வருவது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும், கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ள நபர்கள் கல்லூரி வளாகத்தில் தங்கி இருந்தபடி வேலை செய்து வந்துள்ளனர். அப்படியென்றால் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் இது போன்று நடந்திருக்கலாம் என விசாரணையை துவக்கினர். பின்னர், கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்த அனைவரிடமும் போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தினர். அதில், விக்னேஷ் என்ற இளைஞரின் கையில் காயம் இருந்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், ரத்த மாதிரிகள் மதுரைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதன் முடிவுகளும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

ஒரு தலைக்காதலால் சிந்திய இரத்தம்:

அதன்படி, வகுப்பறையில் சிந்திக் கிடந்தது மனிதர்கள் ரத்தம் தான் என்பது உறுதியானது. எனவே, ரத்த மாதிரி என்ன வகையைச் சேர்ந்தது என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். அதன் பிறகு விக்னேஷ் ரத்த மாதிரியை எடுத்து சோதித்த போது, இரண்டும் ஒத்து போனதால் விக்னேஷை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், சம்பவத்தன்று அந்த பெண்ணிடம் வீடியோ காலில் பேசியபோது, அந்த பெண் தன்னை காதலிக்க மறுத்ததால் மன விரக்தியில் பிளேடால் தன்னைத்தானே கையை அறுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் விக்னேஷை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விக்னேஷ் காதலித்த பெண் யார் என்பதையும் விசாரித்து வந்த நிலையில் அப்பெண் ராணி அண்ணா மகளிர் கல்லூரியைச் சேர்ந்தவர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விக்னேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவத்தில் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தலைக்காதலால் கட்டிட வேலை பார்க்கும் இளைஞர் கல்லூரி வகுப்பறையில் கையை பிளேடால் கிழித்து இரத்தம் சிந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Next DGP : ’தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி இவரா?’  தயாரான பட்டியல்..!
’தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?’ பட்டியல் தயார்..!
CM Stalin Health: முதல்வர் ஸ்டாலினுக்கு என்னாச்சு? அப்பல்லோ வாசலில் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!
CM Stalin Health: முதல்வர் ஸ்டாலினுக்கு என்னாச்சு? அப்பல்லோ வாசலில் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!
IND vs ENG: 35 வருஷமாச்சு.. சச்சின்தான் சதம் அடித்த கடைசி இந்தியர் - அதுவும் அந்த வயசுலயா?
IND vs ENG: 35 வருஷமாச்சு.. சச்சின்தான் சதம் அடித்த கடைசி இந்தியர் - அதுவும் அந்த வயசுலயா?
Chennai Free Parking: சென்னை மக்களே நோட் பண்ணுங்க; வகனங்களுக்கு இப்ப பார்க்கிங் கட்டணம் இல்ல - மாநராட்சி அறிவிப்ப பாருங்க
சென்னை மக்களே நோட் பண்ணுங்க; வகனங்களுக்கு இப்ப பார்க்கிங் கட்டணம் இல்ல - மாநராட்சி அறிவிப்ப பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Next DGP : ’தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி இவரா?’  தயாரான பட்டியல்..!
’தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?’ பட்டியல் தயார்..!
CM Stalin Health: முதல்வர் ஸ்டாலினுக்கு என்னாச்சு? அப்பல்லோ வாசலில் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!
CM Stalin Health: முதல்வர் ஸ்டாலினுக்கு என்னாச்சு? அப்பல்லோ வாசலில் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!
IND vs ENG: 35 வருஷமாச்சு.. சச்சின்தான் சதம் அடித்த கடைசி இந்தியர் - அதுவும் அந்த வயசுலயா?
IND vs ENG: 35 வருஷமாச்சு.. சச்சின்தான் சதம் அடித்த கடைசி இந்தியர் - அதுவும் அந்த வயசுலயா?
Chennai Free Parking: சென்னை மக்களே நோட் பண்ணுங்க; வகனங்களுக்கு இப்ப பார்க்கிங் கட்டணம் இல்ல - மாநராட்சி அறிவிப்ப பாருங்க
சென்னை மக்களே நோட் பண்ணுங்க; வகனங்களுக்கு இப்ப பார்க்கிங் கட்டணம் இல்ல - மாநராட்சி அறிவிப்ப பாருங்க
MK Stalin hospitalized : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல்’ மருத்துவமனை அறிக்கையில் இருப்பது என்ன?
MK Stalin hospitalized : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல்’ மருத்துவமனை அறிக்கையில் இருப்பது என்ன?
Bengaluru Traffic: “தோழி துபாய்க்கே போய்ட்டா! நான் இன்னும் வீட்டுக்கு போகல” – வைரலாகும் பெங்களூரு பெண் பதிவு!
Bengaluru Traffic: “தோழி துபாய்க்கே போய்ட்டா! நான் இன்னும் வீட்டுக்கு போகல” – வைரலாகும் பெங்களூரு பெண் பதிவு!
Karthigai Deepam: கார்த்திக் மீது திருட்டுப் பழி.. சிவனாண்டியுடன் மோதும் சந்திரகலா - என்ன நடக்கப்போகிறது?
Karthigai Deepam: கார்த்திக் மீது திருட்டுப் பழி.. சிவனாண்டியுடன் மோதும் சந்திரகலா - என்ன நடக்கப்போகிறது?
Top Medical Colleges: தொடங்கிய நீட் கலந்தாய்வு; இந்தியாவில் டாப் 20 மருத்துவக் கல்லூரிகள் லிஸ்ட்- சிஎம்சி, எம்எம்சிக்கு எந்த இடம்?
Top Medical Colleges: தொடங்கிய நீட் கலந்தாய்வு; இந்தியாவில் டாப் 20 மருத்துவக் கல்லூரிகள் லிஸ்ட்- சிஎம்சி, எம்எம்சிக்கு எந்த இடம்?
Embed widget