ஏர் இந்தியா விமானத்தில் தீ.. டெல்லியில் பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?
ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கிலிருந்து வந்த அந்த விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளனர்.

ஹாங்காங்கிலிருந்து டெல்லி வந்த AI315 ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீப்பிடித்ததை தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளனர்.
ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் தீ:
கடந்த 12ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விமான விபத்து உலக நாடுகள் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 241 பயணிகளும், விமானம் மோதியதில் 33 பேரும் என 274 பேர் உயிரிழந்தனர். விமானம் வெடித்துச் சிதறியதில் ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிலையில் மற்ற பயணிகள் அனைவரும் தீக்கிரையாகினர்.
Flight AI315, operating from Hong Kong to Delhi on 22 July 2025, experienced an auxiliary power unit (APU) fire shortly after it had landed and parked at the gate. The incident occurred while passengers had begun disembarking, and the APU was automatically shut down as per system…
— Air India (@airindia) July 22, 2025
இந்த சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து, ஏர் இந்தியா விமானங்கள் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஹாங்காங்கிலிருந்து இன்று டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்திருக்கிறது.
இதையும் படிக்க: School Leave: என்னது? இந்த மாசம் 3 நாள் லீவா? குஷியில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்! யார் யாருக்கு, எப்போ?





















