மேலும் அறிய

Tamil Nadu Next DGP : ’தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி இவரா?’ தயாரான பட்டியல்..!

’மத்திய உள்துறையின் புதிய விதியால் தமிழ்நாட்டின் டிஜிபியாக வேண்டும் என்ற கனவில் இருந்த சில ஐபிஎஸ் அதிகாரிகளின் கனவில் மண் விழுந்துள்ளது’

தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியோடு ஓய்வு பெறவிருக்கும் நிலையில், மிக முக்கியமான பதவியான அந்த பொறுப்புக்கு அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.Tamil Nadu Next DGP : ’தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி இவரா?’ தயாரான பட்டியல்..!

பட்டியலில் முன்னணியில் இருப்பது யார் ?

டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் 8 அதிகாரிகளின் பட்டியலை தமிழக உள்துறை தயார் செய்துள்ளதாகவும் அது இந்த வாரத்தில் மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அந்த பட்டியல் அனுப்பப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, டிஜிபி அந்தஸ்தில் உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னியபெருமாள், மகேஷ் குமார் அகர்வால், வெங்கடராமன், வினித் தேவ் வாக்டே ஆகிய 8 பேரின் பட்டியல் மத்டிய அரசுக்கு அனுப்ப தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் மூன்று பேரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூவரும் மத்திய அரசு பணியில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் என்பதால் இவர்களில் ஒருவர் தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

தமிழ்நாடு அரசு அனுப்பும் 8 பேர் கொண்ட பட்டியலில் தகுதியுள்ள 3 பேரை தேர்வு செய்து மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பும், அவர்களில் ஒருவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலின் பேரில் டிஜிபியாக நியமிக்கப்படுவார்.

புதிய விதியால் சிக்கல்

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய விதியின்படி, Level 16 ஊதிய விகிதத்தில் இருக்கும் அதிகாரிகள் மட்டுமே டிஜிபி பதவிக்கு பரிசீலிக்கப்படுவார்கள். இதற்கு முந்தைய விதிகளின்படி 30 ஆண்டுகள் பணியை நிறைவு செய்து டிஜிபி அந்தஸ்தில் உள்ள அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். ஆனால், இந்த புதிய விதியால் சிலரது பெயர் விடுபட்டுள்ளது.

மேலும், டிஜிபி அந்தஸ்தில் உள்ள பிரமோத்குமார், அபய்குமார் சிங், சைலேஷ் குமார் யாதவ் ஆகியோரது பணி காலம் இன்னும் 6 மாதத்திற்குள் நிறைவடையவுள்ள நிலையில், மூவரில்  ஒருவரை காவல் படையின் தலைவராக நியமிக்க அரசு முடிவு செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் டெல்லி காவல் ஆணையராக உள்ள தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோராவும்  இந்த மாதம் 31ஆம் தேதியோடு ஓய்வு பெறவுள்ளதால் அவரை பரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை.

அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சக விதியின்படி, டிஜிபியாக நியமனம் செய்யப்படவேண்டிய ஐபிஎஸ் அதிகாரி, குறைந்தது 10 வருடம் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதும் சிலருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

நியமனம் எப்படி நடக்கும் ?

தமிழ்நாடு அரசு அனுப்பும் டிஜிபி அந்தஸ்தில் உள்ளவர்களின் பெயர்களை UPSC என்கிற மத்திய அரசு தேர்வாணயத்தின் குழு தலைவர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு எட்டப்படும். அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர், மாநில தலைமைச் செயலாளர், மாநிலத்தின் தற்போதைய டிஜிபி, மத்திய போலீஸ் படையின் தலைவர்களில் ஒருவர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிப்பார்கள். அதன்படி, அரசு அனுப்பும் பட்டியலில் இருந்து 3 பேர் இறுதி செய்யப்பட்டு அது மாநில அரசுக்கு அனுப்பப்படும். அதிலிருந்து ஒருவரை தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அரசு நியமித்துக் கொள்ளலாம்.

முக்கியத்துவம் வாய்ந்த நியமனம்

இன்னும் 8 மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிய டிஜிபி நியமனம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு, யாரை புதிய டிஜிபியாக மத்திய அரசு அனுப்பும் பட்டியலில் இருந்து நியமனம் செய்யப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு காவல்துறை வட்டாரத்தில் இப்போதே நிலவத் தொடங்கியிருக்கிறது.

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
Embed widget