மேலும் அறிய

Headlines Today, 24 Aug: தலிபான் எச்சரிக்கை...கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி..பாராலிம்பிக்ஸ் போட்டிகள்..இன்னும் பல!

கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • ஆகஸ்ட் 31க்குள் வெளிநாட்டுப்படைகள் திரும்பப்பெறாவிட்டால் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கப்படைகளை தலிபான் எச்சரித்துள்ளது. காபூல் விமானத்தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து தலிபான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

    Headlines Today, 24 Aug: தலிபான் எச்சரிக்கை...கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி..பாராலிம்பிக்ஸ் போட்டிகள்..இன்னும் பல!

  • காபூலில் இருந்து ஒரே நாளில் 10,900 பேரை 49 விமானங்கள் மூலம் அமெரிக்க மீட்டுள்ளது.
     
  • டெல்லியில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் முன்பு நேற்று ஆஃப்கான் அகதிகள் போராட்டம் நடத்தினார்கள்.இந்தியாவில் ஆஃப்கானியர்கள் வாழமுடியாது என்பதால் சர்வதேச நாடுகளுக்குப் புலம்பெயர்வதற்கான சான்றிதழை விரைந்து விநியோகிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.
     
  • இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில் அதனை சாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்துமாறு பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார். நேற்று டெல்லியில் பிரதமரைச் சந்தித்த அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் சாதிவாரிக் கணக்கெடுக்குப்புக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. 

    Headlines Today, 24 Aug: தலிபான் எச்சரிக்கை...கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி..பாராலிம்பிக்ஸ் போட்டிகள்..இன்னும் பல!
  • கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த கொலை வழக்கில் கைதாகியுள்ள சதீஷன், சந்தோஷ் சாமி உள்ளிட்ட 3 பேர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி சசிகலா மற்றும் சுதாகரனை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

  • தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி போலீசாரிடம் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சுஷீல் ஹரி பள்ளி பாலியல் குற்ற விவகாரத்தில் சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீஸாரிடம் இவ்வாறு பாபா வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    Headlines Today, 24 Aug: தலிபான் எச்சரிக்கை...கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி..பாராலிம்பிக்ஸ் போட்டிகள்..இன்னும் பல!
  • மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக ஹரிஹர மகாதேசிக பரமாச்சாரியார் பொறுப்பேற்றுள்ளார். அண்மையில் 292வது ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் மறைந்ததை அடுத்து புதிய ஆதீனம் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

  • ’பேனர் உள்ளிட்ட ஆடம்பரங்களைத் தவிர்க்குமாறு பலமுறை கண்டிப்புடன் வலியுறுத்தியும் ஆங்காங்கே அத்தகைய செயல்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது. கழகத்தினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்.சிறுவன் தினேஷை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாரின் துயரில் துணைநிற்கிறேன்’ என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்ற விழா ஒன்றுக்கு கொடிகம்பம் வைத்த போது மின்கம்பி உரசி 13 வயது  சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார். 

  • டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகள் இன்று தொடங்கவுள்ளன. இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கவுள்ளது. தடகள வீரர் தங்கவேலு மாரியப்பன் நிகழ்வில் இந்தியக் கொடியை ஏந்திச் செல்கிறார். மொத்தம் 54 இந்திய வீரர்கள் இந்த பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget