மேலும் அறிய

Madurai: உணவக பார்சல் சாப்பாட்டில் கிடந்த பிளேடு.. எழுந்த சர்ச்சை... விளக்கமளித்த உணவுப்பாதுகாப்புத்துறை!

மதுரையில் உணவகத்தில் பார்சல் சாப்பாட்டில் பிளேடு கிடந்த விவகாரத்தில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயவீர பாண்டியன் விளக்கமளித்துள்ளார்.

மதுரை பெரியார்நிலையம் அருகே உள்ள சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்த முகமது. இவரது மனைவி நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள கெளரி கங்கா உணவகத்தில் சாப்பாடு பார்சல் ஒன்றை வாங்கி சென்றுள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்த போது வெள்ளை சாதத்தில் பாதி உடைந்த பிளேடு துண்டு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று கடையில் வேலை பார்த்த ஊழியர் ஞானம் என்பவரிடம் கேட்ட போது அவர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முகமது உணவுப்பாதுகாப்புத்துறைக்கு கொடுத்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த உணவை சோதனை செய்ததோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். 


Madurai: உணவக பார்சல் சாப்பாட்டில் கிடந்த பிளேடு.. எழுந்த சர்ச்சை... விளக்கமளித்த உணவுப்பாதுகாப்புத்துறை!

அப்போது வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படாமல் இருந்துள்ளது.  மேலும் பணியாளர்களிடம் மருத்துவசான்று, தலையுறை அணியாமல் உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக்கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக்கொடுத்துள்ளது. மேலும் உணவுப்பாதுகாப்புத்துறை சுட்டிக்காட்டிய புகார்கள் குறித்து உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


Madurai: உணவக பார்சல் சாப்பாட்டில் கிடந்த பிளேடு.. எழுந்த சர்ச்சை... விளக்கமளித்த உணவுப்பாதுகாப்புத்துறை!

இது குறித்து மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயவீர பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியபோது மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பாட்டில் பிளேடு கிடந்தது குறித்து உணவுபாதுகாப்புதுறை அதிகாரிகள் நேரில் ஆய்வுமேற்கொண்டனர். ஆய்வின்போது அங்கு வெள்ளை சாதம் இல்லாத நிலையில் பிளேடு கிடந்தது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. மேலும் உணவகத்தை ஆய்வு மேற்கொண்டபோது ஊழியர்கள் தலையுறை இன்றியும், சமைக்கும் அறை உரிய பராமரிப்பு இன்றி இருப்பது தெரியவந்தது.


Madurai: உணவக பார்சல் சாப்பாட்டில் கிடந்த பிளேடு.. எழுந்த சர்ச்சை... விளக்கமளித்த உணவுப்பாதுகாப்புத்துறை!

இதனை தொடர்ந்து உணவகத்தில் ஊழியர்கள் தலையுறை மற்றும் சமையல் இடம் முறையாக பராமரிக்கவில்லை என கூறி உணவகத்திற்கு நோட்டிஸ் அளிக்கப்பட்டது தொடர்ந்து 14 நாட்களுக்கு சரிசெய்யுமாறு அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து கங்கா கௌரி உணவகத்தின் 3 கிளைகளின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளோம்” என்றார் தொடர்ந்து உணவகங்களில் அதிகளவு உணவுகளில் வண்ணம் சேர்க்கும் கடைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: ''அமைச்சருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை தான் திராவிட மாடல்"- அண்ணாமலை சாடல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
Embed widget