மேலும் அறிய

"ஒரே ஜெயில்தான் வேணும்" கணவரை தீர்த்து கட்டிய மனைவி.. சிறையில்கூட காதலருடன்தான் இருப்பேன் என அடம்

உபியில் பெண் ஒருவர், தன்னுடைய காதலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார்.  சிறைக்கு சென்ற அவர், காதலுருடன் ஒரே சிறையில்தான் இருப்பேன் என அடம் பிடித்துள்ளார்.

போதைக்கு அடிமையான பெண் ஒருவர், தன்னுடைய காதலருடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார்.  சிறைக்கு சென்ற அவர், காதலுருடன் ஒரே சிறையில்தான் இருப்பேன் என அடம் பிடித்துள்ளார். ஆனால், சிறை விதிகளின்படி ஆணும் பெண்ணும் ஒரே சிறையில் அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போதையில் கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி:

உத்தரப் பிரதேசம் மீரட்டை சேர்ந்தவர் முன்னாள் கடற்படை அதிகாரி சவுரப் ராஜ்புத். கடந்த இரண்டு ஆண்டுகளாக லண்டனில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி முஸ்கான். இவர், சாஹில் என்ற வேறொரு நபருடன், திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.

கடந்த வாரம், தனது கணவர் சவுரப் ராஜ்புத்தை கொலை செய்ததாக முஸ்கானும் சாஹிலும் கைது செய்யப்பட்டனர். தனது ஆறு வயது மகளின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த சவுரப்பை இருவரும் சேர்ந்து கொலை செய்திருக்கின்றனர். 

இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "கடந்த மார்ச் 4 ஆம் தேதி, சவுரப்புக்கு போதை மருந்து கொடுத்து குத்திக் கொலை செய்துள்ளார் முஸ்கான். பின்னர், அவரும் சாஹிலும் இணைந்து, சவுரப் உடலை 15 துண்டுகளாக வெட்டி, டிரம்மில் போட்டு, அதன் மேல் ஈரமான சிமெண்டை வைத்து மூடியுள்ளனர்.

"காதலருடன்தான் இருப்பேன்"

பின்னர், இருவரும் இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றனர். அங்கு சவுரப்பின் தொலைபேசியைப் பயன்படுத்தி அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் ஏமாற்றியுள்ளனர். சமூக ஊடகங்களில் சில படங்களை பகிர்ந்துள்ளனர். பின்னர், தானும் சாஹிலும் சவுரப்பைக் கொன்றதாக முஸ்கானின் பெற்றோரிடம் ஒப்பு கொண்டனர்" என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கைதாகி சிறையில் உள்ள முஸ்கான், தன்னுடைய காதலருடன் ஒரே சிறையில்தான் இருப்பேன் என அடம் பிடித்துள்ளார். ஆனால், சிறை விதிகளின்படி ஆணும் பெண்ணும் ஒரே சிறையில் அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மீரட் சவுத்ரி சரண் சிங் மாவட்ட சிறைச்சாலை அதிகாரிகள் கூறுகையில், "இருவரும் சிறை அதிகாரிகளிடம் ஒரே முகாமில் தங்க விரும்புவதாக சொன்னார்கள். ஆனால், அதிகாரிகள் சிறை விதிகளை மேற்கோள் காட்டி இதை அனுமதிக்க முடியாது என்று கூறினர்.

மருத்துவ பரிசோதனையில் அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்பது தெரியவந்தது. போதை பொருளை திடீரென நிறுத்தியதால் சில சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தனர்.

 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Crime: மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
AB PM-JAY Scheme: 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
Embed widget