மேலும் அறிய
கண்கொள்ளா காட்சி மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தெப்ப திருவிழா சிறப்பு ஆல்பம் !
மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா கோலகலமாக தொடங்கி நடைபெற்றது. சுவாமியும் அம்மனும் தெப்பத்தில் வலம்வந்து பின்னர் மைய மண்டபத்தில் எழுந்தருளினர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா
1/8

நேற்று மதியம் சிந்தாமணி பகுதியில் கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் கதிரறுப்பு திருவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தைப்பூதச பௌர்ணமி தினமான இன்று தெப்பத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
2/8

சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர்.
3/8

அனுப்பானடியை சேர்ந்த இளைஞர்கள் தெப்பத்தேரினை வடம் பிடித்து இழுப்பதற்காக பாரம்பரிய முறைப்படி அழைத்துவரப்பட்டனர். பின்னர் கிராமத்தினருக்கு கோயில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
4/8

தெப்பத்தேரினை வடம் பிடித்து இழுக்க தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும் , அம்மனையும் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகளும் என ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
5/8

தெப்ப உற்சவத்தின்போது மட்டும் தான் சுவாமியும், அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினாலும் கூட சுவாமியை விட அம்மன் கூடுதலாக ஒரு வாகனமான அவுதா தொட்டி வாகனத்தில் எழுந்தருளுவார் என்பது கூடுதல் சிறப்பு.
6/8

நீர் நிரம்ப காணப்பட்ட தெப்பக்குளத்தில் சுவாமியும் அம்மனும் இருமுறை வலம்வந்த நிலையில் சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தருவார்கள்.
7/8

இவ்விழாவில் மதுரை மண்டல இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, மீனாட்சியம்மன் கோவில் துணை ஆணையர் கிருஷ்ணன், அறங்காவலர்குழு உறுப்பினர் மீனாஅன்புநிதி மற்றும் இந்து அறிநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
8/8

காவல் துறையினர் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டனர் பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாநகர காவல் ஆணையர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Published at : 11 Feb 2025 03:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement