மேலும் அறிய

Bombay High Court: திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மணமகளாய் உனைப் பார்த்த பின்னும்.. நெஞ்சம் சிறைபிடிக்க துடிக்குதடி என்று பாடுவது தமிழ் சினிமாவில் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கலாம்.

மணமகளாய் உனைப் பார்த்த பின்னும்.. நெஞ்சம் சிறைபிடிக்க துடிக்குதடி என்று பாடுவது தமிழ் சினிமாவில் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால், நிஜ வாழ்வில் திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது என மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தீர்ப்பளித்துள்ளது.

வழக்கின் முன்கதை சுருக்கம்:

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் மளிகைக் கடை வைத்திருப்பவர் ஸ்ரீகிருஷ்ண திவாரி. இவர் தனது கடைக்கு அருகே வசிக்கும் 45 வயது நிரம்பிய திருமணமான பெண்ணின் மீது நாட்டம் கொண்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கு ஒரு நாள் காதல் கடிதமும் கொடுத்துள்ளார்.  அந்தப் பெண் அதிர்ந்து போய் அவரைப் புறக்கணிக்க முயன்றுள்ளார். இருந்தாலும் ஸ்ரீகிருஷ்ண திவாரி தனது லீலைகளைக் கைவிடுவதாக இல்லை. பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம் பாலுணர்வுடன் கூடிய சமிக்ஞைகளைக் காட்டியுள்ளார். போதாதற்கு அந்தப் பெண்ணை மிரட்டியும் உள்ளார். கடிதம் விஷயத்தையோ இல்லை தனது லீலைகளைப் பற்றியோ வெளியில் கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

ஆனால், ஒருகட்டத்தில் கிருஷ்ணதிவாரியின் கொடுமைகள் தாளாமல் அப்பெண் காவல்துறையில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் கிருஷ்ண திவாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கிருஷ்ண திவாரி மும்பை உயர் நீதிமன்றம் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீட்டு மனுவில், அந்தப் பெண் எனது கடையில் மளிகைப் பொருட்களை கடனாக வாங்குவார். கடன்பாக்கியை வசூலிக்க முயன்றபோது என் மீது போலி புகாரைக் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிருஷ்ணதிவாரி மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானதே. மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.90 ஆயிரமாக உயர்த்தி நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஏற்கெனவே மனுதாரர் 45 நாட்கள் சிறையில் இருந்துவிட்டதால் ரூ.5000 குறைத்துக் கொள்ளப்படுகிறது என்று உத்தரவிடப்பட்டது. கிருஷ்ண திவாரி திருந்த வாய்ப்பளித்து கூடுதல் சிறைத் தண்டனை இல்லாமல் அபராதத்துடன் விடுவிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டது.

கடிதம் குற்றமே..

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுப்பது அவரது கண்ணியத்தைக் குறைக்கும் செயல். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கடிதத்தைக் கொடுத்துவிட்டு பெண்ணை மிரட்டியுள்ளார், ஆபாச தொனியில் சமிக்ஞைகளும் காட்டியுள்ளார். இவை எல்லாமே குற்றச்செயல் என மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani Ramadoss: ‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
Fact Check: ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani Ramadoss: ‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
Fact Check: ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
Chennai Power Shutdown(09.07.25): சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Embed widget