"துணை முதல்வர் PA-வை தெரியும்"2011-லேயே பணமோசடி! நிகிதாவின் தில்லாலங்கடி
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மேல் திருட்டு புகார் அளித்த நிகிதா மீது கடந்த 2011 ஆம் ஆண்டு பண மோசடி வழக்கு பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. அப்போதையை துணை முதலமைச்சரின் PA-வை தனக்கு நன்கு தெரியும் என்று சொல்லி அவர் இந்த மோசாடியில் ஈடுபட்ட தகவலும் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் போலீஸ் விசாரணையில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.ஆளும் திமுக அரசிடமும் காவல்துறையிடமும் பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் கேட்டு வருகிறது. இதனிடையே இது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த நிலையில் திருப்புவனம் வழக்கில் நிகிதா அளித்த புகாரின் பெயரில் தான் அஜித்தை போலீசார் அழைத்து சென்றனர். இச்சூழலில் அஜித் மீது வாய்மொழியாக திருட்டு புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
அதன்படி வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக நிகிதா மீது 2011-ல் FIR பதிவாகியுள்ளது. திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர் அளித்துள்ள இந்த புகாரில் நிகிதாவும் அவருடைய தாயார் சிவகாமி, தந்தை உட்பட ஆறு பேர் மீது மோசடிப்புகார் பதிவாகியுள்ளது. தெரியவந்துள்ளது. அந்த புகாரில், அப்போதையை துணை முதலமைச்சரின் இருந்த PA- வை தனக்கு தெரியும்.
அவர் மூலம் எங்களது சொந்தக்காரர்களுக்கு வேலை வாங்கி தருவதாகவும் அந்த வகையில் ஆசிரியர் பணி வாங்கித்தருவதாக ஓன்பது லட்சமும், விஏஒ பணி வாங்கி தருவதாக ஏழு லட்சமும் கொடுத்தோம். இப்படி பதினாறு லட்சம் வரை கொடுத்துள்ளோம். ஆனால், அவர்கள் கூறியபடி வேலை எதுவும் வாங்கித்தராமல் சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி காலம் தாழ்த்தி வந்தனர். 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அவரது வீட்டிற்குச் சென்று பார்த்த போது வீடு பூட்டி இருந்தது. பின்னர் பணத்தை திருப்பு தர முடியாது என்று கூறி எங்கள் மிரட்டினார்கள் என்றும் அந்த எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.





















