மேலும் அறிய

மத்திய பட்ஜெட்டில் இதை உறுதி செய்யணும் - விவசாயிகள் வலியுறுத்தியது என்ன?

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காலதாமதம் இன்றி பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்போது தனியாருக்கு விடப்படுவதாக செய்திகள் பரவுகிறது.

தஞ்சாவூர்: 2025-26 மத்திய நிதிநிலை அறிக்கையில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை உறுதி செய்ய வேண்டும். பருவம் தவறி பெய்த மழையால் பாதித்த பயிர்களுக்கு உடன் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பேசியதாவது: 

தோழகிரிப்பட்டி பி.கோவிந்தராஜ் : 2025-26 மத்திய நிதிநிலை அறிக்கையில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாய கடனை தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வெளியிட வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,000 விலை அறிவிக்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை அறிவிக்க வேண்டும். பிஎம் கிஷான் நிதியை ஆண்டுக்கு ரூ.12,000 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காலதாமதம் இன்றி பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்போது தனியாருக்கு விடப்படுவதாக செய்திகள் பரவுகிறது. இதனை கைவிட வேண்டும். தொடர்ந்து அரசே கொள்முதல் நிலையங்களை நடத்த வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடி அதிக அளவில் செய்வதால் அதனை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு ஆலை கொண்டு வர வேண்டும். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை அரவை துவங்கி உள்ள நிலையில் வெட்டுகிற கரும்பிற்கு அளிக்கப்படும் காசோலை கூட்டுறவு வங்கிகளில் வரவு வைப்பது மிகவும் தாமதமாகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு புதிய சாக்குகள் வழங்க வேண்டும்.

பெரம்பூர் ஆர்.அறிவழகன் : பயிர் காப்பீடு இழப்பீடு வழங்குவதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் சராசரி பார்க்க வேண்டும். விதைப்பண்ணை விவசாயிகளுக்கு 10 ஆண்டு பழமையான விதைகளுக்கு உற்பத்தி மானியத்தை உடன் வழங்க வேண்டும்.  100 நாள் பணியாளர்களை விவசாயப் பணிக்கு ஈடுபட அனுமதிக்க வேண்டும். நெல் கொள்முதல் செய்யும் போது ஈரப்பதம் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கரும்பு உற்பத்தியை அதிகரிக்க தனியார் அறைகளில் கொடுப்பது போல் விதை மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

ஆம்பலாப்பட்டு  தங்கவேல்: கடந்த டிசம்பர் ஜனவரி பருவ காலத்தில் விதைத்த உளுந்து சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டு மஞ்சள் நிறமாக மாறி விவசாயிகளுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தி உள்ளது. இதனை நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

தஞ்சாவூர் பழனியப்பன் : கடந்த 2018 கஜா புயலில் ராஜா மடம் ஆற்றங்கரையில் சாய்ந்து கிடக்கும் தேக்கு மரங்கள் இன்று வரை அகற்றப்படாமல் உள்ளது. இதை உடன் அகற்ற வேண்டும். சாலையோரங்களில் புதிதாக நடப்படும் மரங்களில் பழவகை மரங்கள் நடுவதில்லை. இனிமேல் நடும் மரக்கன்றுகளில் 40 சதவீதம் மரக்கன்றுகளை பழமரக்கன்றுகளாக நட வேண்டும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகையினையும் மத்திய, மாநில அரசுகள் உடன் பெற்று தர வேண்டும்.

பொன்னவராயன் கோட்டை வா.வீரசேனன் : கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலுக்கு பிறகும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 47 ஆயிரம் எக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்து 300 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது மத்திய அரசின் சார்பில் கேரளா மாநில கொச்சினை தலைமை இடமாகக் கொண்டு தென்னை வளர்ச்சி வாரியம் இயங்கி வருகிறது. இந்த வாரியத்தின் மூலம் தென்னை விவசாயிகளுக்கு பொருளாதார உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தில் மண்டல அலுவலகத்தை மீண்டும் பட்டுக்கோட்டையில் துவங்க வேண்டும். பட்டுக்கோட்டை -மன்னார்குடி ரயில் வழி பாதையால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவர். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.

ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் : நெல் குவிண்டாலுக்கு ரூ 3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 உயர்த்தி வழங்க வேண்டும். பாரம்பரிய நெல் ரகங்களில் சீரக சம்பா, தூயமல்லி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே பாரம்பரிய நெல் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும். நெல் கொள்முதலை அரசே நடத்த வேண்டும். ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

திருப்பனந்தாள் சுரேஷ்: எங்கள் பகுதியில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் கட்ட வேண்டும். 100 நாள் வேலை திட்டப் பணிக்கான பணம் இன்னும் வந்து சேரவில்லை. உடன் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அருமலைக்கோட்டை தங்கராசு : பைபாஸ் சாலையில் உள்ள பனை மரங்கள் வெட்டப்படுகிறது. தமிழ் தேசிய மரமான பனை வெட்டப்படுவதை தவிர்க்க வேண்டும்.

வெள்ளாம்பெரம்பூர் துரை.ரமேஷ் : கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இன்னும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு  கூடுதலாக நெல் அறுவடை இயந்திரங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்லணையை கட்டிய கரிகால் சோழனுக்கு அரசு விழா எடுக்க வேண்டும். தொடர்பாக ஏழு ஆண்டுகளாக காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் வேண்டுகோள் விடுத்து வருகிறோம். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.எஸ்.முகமது இப்ராஹிம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை அம்மாபேட்டை பாபநாசம் கும்பகோணம் பகுதியில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது ஆனால் நெல் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வருவாய் கிராமங்களிலும் உடன் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து தனியார் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதை தடுக்கும் வகையில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் ஏற்படுத்த வேண்டும். ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி நெல் கொள்முதல் செய்ய வேண்டும். மழையால் பாதித்த பயிர்களுக்கு உடன் நிவாரண நிதி வழங்க வேண்டும். 

இவ்வாறு விவசாயிகள் பேசினர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் வேளாண் இணை இயக்குனர் வித்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Youtuber: ”வீடு கட்ட காசு வேணும்“ காதல் மனைவியை டார்ச்சர் செய்த டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன்? தலைமறைவு?
Youtuber: ”வீடு கட்ட காசு வேணும்“ காதல் மனைவியை டார்ச்சர் செய்த டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன்? தலைமறைவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
IND vs ENG 2nd Test: 58 ஆண்டு கால சோகத்திற்கு இன்று முடிவு? எட்ஜ்பாஸ்டனில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? பவுலர்கள் கையில்தான்!
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Neeraj Chopra Classic 2025: பட்டமே என் பேர்லதான் இருக்கு..! ஜெயிக்கலன்னா எப்படி? நீரஜ் சோப்ரா சம்பவம் - 86.18மீ
Youtuber: ”வீடு கட்ட காசு வேணும்“ காதல் மனைவியை டார்ச்சர் செய்த டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன்? தலைமறைவு?
Youtuber: ”வீடு கட்ட காசு வேணும்“ காதல் மனைவியை டார்ச்சர் செய்த டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன்? தலைமறைவு?
India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
உங்கள் தண்ணீரின் தரம் சரியா? வீட்டில் இருந்தபடியே அறிய எளிய வழிகள்! தண்ணீர் சுத்தத்தை உடனே சோதிக்கலாம்!
உங்கள் தண்ணீரின் தரம் சரியா? வீட்டில் இருந்தபடியே அறிய எளிய வழிகள்! தண்ணீர் சுத்தத்தை உடனே சோதிக்கலாம்!
IND Vs ENG Test: வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
Embed widget