மேலும் அறிய

தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?

மகாராஷ்ட்ராவில் இந்தி திணிப்புக்கு எதிராக மராத்தியர்கள் நடத்திய மாபெரும் போராட்டம் வெற்றி பெற்றதால் மத்திய பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் மத்தியி்ல் ஆட்சி செய்த அரசுகளுக்கு எப்போதும் இந்தி என்பது ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் இந்தி என்பது எந்தவொரு மாநிலத்தவர்க்கும் இருக்கும் நிலையில், இந்தியை கட்டாயமாக்க பல ஆண்டுகாலமாகவே மத்தியில் இருக்கும் அரசுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

கொந்தளித்த மராத்தியர்கள்:

அந்த வரிசையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசும் அந்த முயற்சிகளை பல்வேறு வழிகளில் மேற்கொண்டு வருகிறது. புதிய கல்விக்கொள்கையில் 3வது மொழியாக இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநில அரசுகளும் குற்றம் சாட்டி வந்தன. 


தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?

இந்த நிலையில், பா.ஜ.க. ஆட்சி செய்யும் மகாராஷ்ட்ராவில் அவர்கள் கொண்டு வந்த மும்மொழிக் கொள்கையில் இந்தி 3வது மொழியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது மராத்தியர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், ஏற்கனவே மகாராஷ்ட்ராவில் மராத்தி பேசுபவர்களை காட்டிலும் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொடர்ந்து பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

பின்வாங்கிய பா.ஜ.க. அரசு:

மகாராஷ்ட்ராவின் மிகவும் முக்கிய தலைவராக திகழ்ந்த பால் தாக்கரேவின் வாரிசுகளான உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் இந்தி மொழியை திணிப்பதை ஏற்க முடியாது என்று ஒருமித்த குரலில் எதிர்த்தனர். இந்த சூழலில், அவர்கள் முன்னெடுத்த போராட்டம், பிற மராட்டிய அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த போராட்டம் காரணமாக அந்த மாநில பா.ஜ.க. அரசு பின்வாங்கியது. 

மேலும், இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ராஜ்தாக்கரேவும், உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் ஒரே மேடையில் இணைந்து பேசியது ஒட்டுமொத்த மகாராஷ்ட்ரா அரசியலிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மீண்டும் மகாராஷ்ட்ராவில் சிவசேனா பழைய பலத்துடன் எழுச்சி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

பெரும் பின்னடைவு?

இது மட்டுமின்றி, இந்த விவகாரம் பா.ஜ.க.விற்கு பெரும் பி்ன்னடைவாக மாறியுள்ளது. ஏனென்றால், இந்தி திணிப்பு எதிர்ப்பை தென்னிந்திய மாநிலங்களே பெருவாரியாக எதிர்த்து வந்தன. ஆனால், வட இந்தியாவில் அதுவும் பா.ஜ.க. கோலோச்சும், தேசிய அரசியலில் முக்கியத்துவம் மிகுந்த மகாராஷ்ட்ராவில் இந்தி திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்திருப்பது பா.ஜ.க. தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வட இந்தியாவில் எழுச்சி?


தமிழன் டூ மராத்தி.. பலத்த அடி வாங்கிய பாஜக! வட இந்தியாவில் பரவப்போகும் இந்தி திணிப்பு எதிர்ப்பு?

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் மட்டுமே நடத்தி வரும் நிலையில், மகாராஷ்ட்ராவில் மராத்தி பேசாதவர்கள் மீது சில அமைப்பினர் தாக்குதல் நடத்தியது இந்த விவகாரத்தின் வீரியத்தை அவர்களுக்கு உணர்த்தியுள்ளது. தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்திலே இந்த நிலைமையா? என்று பா.ஜ.க. தலைமை புலம்பி வருவதாக கூறப்படுகிறது. இது அடுத்து அங்கு நடக்கும் தேர்தல்களிலும் எதிரொலிக்கும் வாய்ப்புகள் பிரகாசம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதன் காரணமாக ராஜஸ்தான், குஜராத், பீகார், பஞ்சாப் என வட இந்தியா முழுவதும் அவர்களது சொந்த மொழி மீதான எழுச்சி மீண்டும் வலுப்பெறும் என்று அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதனால், இந்திக்கு எதிரான கண்டனம் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Maduro's Son Vs America: “பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
“பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Maduro Vs US Court: “நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
“நான் குற்றமற்றவன், என்னை கடத்திவிட்டார்கள்“; நியூயார்க் நீதிமன்றத்தில் நிகோலஸ் மதுரோ அதிரடி வாதம்
Embed widget