Sivagangai shutdown (14.08.2025): சிவகங்கை மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்தடை லிஸ்ட் இதோ
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளை மின்தடை முழுமையாக படிக்கவும்.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (14.08.2025) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்
திருப்புவனம், புதூர், பழையூர், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியம், மேல ராங்கியம், வயல்சேரி, கலியந்தூர், மேலவெள்ளூர், கீழவெள்ளூர், மாங்குடி, அம்பலத்தடி, மணலூர், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், பூவந்தி, வடகரை, பொட்டப்பாளையம், புலியூர், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, சைனாபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூர், தூதை, மாரநாடு, ஆவரங்காடு, மேலசொரிக்குளம், வெள்ளிக்குறிச்சி, முதுவந்திடல் உள்ளிட்ட பகுதிகள்.
மின்தடை நேரத்தில் செய்யவேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.





















