மேலும் அறிய

"குழந்தைங்க பொறக்கல.. அதான் மாணவர்கள் சேரல" 208 அரசுப்பள்ளிகளை மூடுவதற்கு இதான் காரணமாம்!

தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததே அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததற்கு காரணம் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்படும் 208 அரசுப்பள்ளிகள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார். 

மாணவர் சேர்க்கை இல்லை:

அவர் அளித்துள்ள விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் 59 ஆயிரத்து 824 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1.21 கோடி மாணவர்கள் படிக்கிறார்கள். 5 லட்சத்து 34 ஆயிரத்து 799 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 208 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 114 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், 869 சுயநிதி பள்ளிகள், இரு மத்திய பாடத்திட்ட பள்ளிகள் என மொத்தம் 1204 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. 

குழந்தை பிறப்பு விகித சரிவே காரணம்:

சுயநிதி பள்ளிகளில் 72 சதவீதமும், இதர பள்ளிகளில் 28 சதவீதமும் மாணவர்கள் சேர்க்கை நடக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். இதற்கு அரசு பள்ளி, தனியார் பள்ளி என்ற பாகுபாடு காரணம் அல்ல.

2011ம் ஆண்டு 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10 லட்சத்து 74 ஆயிரமாக இருந்தது. 2016ல் 10 லட்சத்து 45 ஆயிரமாக குறைந்தது. அடுத்தாண்டில் இது 8.78 லட்சமாக குறையும் என 2020ல் வெளியான மக்கள்தொகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள்:

கிராமப்புற, தொலைதூர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பள்ளிகளில் சேரும் வயதில் குழந்தைகள் இல்லை. கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டியில் உள்ள பள்ளியில் படித்த நான்கு மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் இடம்பெயர்ந்தனர். இவர்களில் 3 மாணவர்கள் எல்லை மேட்டுப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், மற்றொரு மாணவி சின்னதாராபுரம் ஆர்சி உதவிபெறும் தொடக்கப்பள்ளியிலும் படிக்கின்றனர். இதனால், யாரும் இடைநிற்றலில் இல்லை.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி, ஆங்கில வழிக்கல்வி பெறுவதை பெருமையாக கருதுவதால் பெற்றோர்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதாலும் கிராமப்புறங்களில் சேர்க்கை குறைகிறது. பல்வேறு நலத்திடட உதவிகளை வழங்கியும், கட்டமைப்புகளை மேம்படுத்தியும், மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அரசு தெரிவித்துள்ளது போல தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் என்பது ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது. மேலும், சமீபகாலமாக கிராமப்புறங்கள் உள்பட பல பகுதிகளிலும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஆகும். அரசு தரப்பில் காரணங்கள் எது கூறினாலும் பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

தரத்தை உயர்த்த வேண்டும்:

ஆங்கில மொழித் திறனுக்காகவே பல பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். அதனால், அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு ஏற்றாற்போல பயிற்சிகள் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு தரமானதாக இருந்தாலும், அதை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் மாணவர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் அதிகரிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Thiruvallur District Holiday : ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்
ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!

வீடியோ

குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2500? மகளிருக்கு பட்ஜெட்டில் சர்ப்ரைஸ் CM விஜய் மெகா பிளான்
300 பேர் கூண்டோடு ராஜினாமா? CVS ஆதரவாளர்கள் திடீர் முடிவு விழுப்புரம் அதிமுகவில் பரபரப்பு
காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Actor Dhanush Political Entry : ’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
ரூ.100 கோடி பழனி கோயில் நிலம் மோசடி.! கிரையப் பத்திரத்தில் வெளியான ஷாக் தகவல்
ரூ.100 கோடி பழனி கோயில் நிலம் மோசடி.! கிரையப் பத்திரத்தில் வெளியான ஷாக் தகவல்
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Embed widget