மேலும் அறிய

"குழந்தைங்க பொறக்கல.. அதான் மாணவர்கள் சேரல" 208 அரசுப்பள்ளிகளை மூடுவதற்கு இதான் காரணமாம்!

தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததே அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததற்கு காரணம் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்படும் 208 அரசுப்பள்ளிகள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார். 

மாணவர் சேர்க்கை இல்லை:

அவர் அளித்துள்ள விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் 59 ஆயிரத்து 824 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1.21 கோடி மாணவர்கள் படிக்கிறார்கள். 5 லட்சத்து 34 ஆயிரத்து 799 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 208 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 114 அரசு உதவி பெறும் பள்ளிகள், 11 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், 869 சுயநிதி பள்ளிகள், இரு மத்திய பாடத்திட்ட பள்ளிகள் என மொத்தம் 1204 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. 

குழந்தை பிறப்பு விகித சரிவே காரணம்:

சுயநிதி பள்ளிகளில் 72 சதவீதமும், இதர பள்ளிகளில் 28 சதவீதமும் மாணவர்கள் சேர்க்கை நடக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். இதற்கு அரசு பள்ளி, தனியார் பள்ளி என்ற பாகுபாடு காரணம் அல்ல.

2011ம் ஆண்டு 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10 லட்சத்து 74 ஆயிரமாக இருந்தது. 2016ல் 10 லட்சத்து 45 ஆயிரமாக குறைந்தது. அடுத்தாண்டில் இது 8.78 லட்சமாக குறையும் என 2020ல் வெளியான மக்கள்தொகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள்:

கிராமப்புற, தொலைதூர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பள்ளிகளில் சேரும் வயதில் குழந்தைகள் இல்லை. கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டியில் உள்ள பள்ளியில் படித்த நான்கு மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் இடம்பெயர்ந்தனர். இவர்களில் 3 மாணவர்கள் எல்லை மேட்டுப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், மற்றொரு மாணவி சின்னதாராபுரம் ஆர்சி உதவிபெறும் தொடக்கப்பள்ளியிலும் படிக்கின்றனர். இதனால், யாரும் இடைநிற்றலில் இல்லை.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி, ஆங்கில வழிக்கல்வி பெறுவதை பெருமையாக கருதுவதால் பெற்றோர்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதாலும் கிராமப்புறங்களில் சேர்க்கை குறைகிறது. பல்வேறு நலத்திடட உதவிகளை வழங்கியும், கட்டமைப்புகளை மேம்படுத்தியும், மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அரசு தெரிவித்துள்ளது போல தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் என்பது ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது. மேலும், சமீபகாலமாக கிராமப்புறங்கள் உள்பட பல பகுதிகளிலும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஆகும். அரசு தரப்பில் காரணங்கள் எது கூறினாலும் பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

தரத்தை உயர்த்த வேண்டும்:

ஆங்கில மொழித் திறனுக்காகவே பல பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். அதனால், அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு ஏற்றாற்போல பயிற்சிகள் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு தரமானதாக இருந்தாலும், அதை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் மாணவர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் அதிகரிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
TNPSC தேர்வர்கள் எதிர்பார்த்த குட் நியூஸ் வந்தாச்சு.! தேதி அறிவித்த சென்னை மாவட்ட ஆட்சியர்
TNPSC தேர்வர்கள் எதிர்பார்த்த குட் நியூஸ் வந்தாச்சு.! தேதி அறிவித்த சென்னை மாவட்ட ஆட்சியர்
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Toyota Urban Cruiser Ebella: எபெல்லா வந்தாச்சு..! இ-விட்டாரா தாங்குமா? டொயோட்டா EV-யின் விலை, அம்சங்கள், வசதிகள்
எபெல்லா வந்தாச்சு..! இ-விட்டாரா தாங்குமா? டொயோட்டா EV-யின் விலை, அம்சங்கள், வசதிகள்
Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
Normal vs Power Petrol: நார்மல் பெட்ரோலா.? பவர் பெட்ரோலா.? உங்கள் கார், பைக்கிற்கு சிறந்தது எது.? தெரிஞ்சுக்கோங்க
நார்மல் பெட்ரோலா.? பவர் பெட்ரோலா.? உங்கள் கார், பைக்கிற்கு சிறந்தது எது.? தெரிஞ்சுக்கோங்க
Embed widget