மேலும் அறிய

’’இது எங்க அறிக்கையே இல்ல’’ என்னதான் நடந்தது மாநில கல்விக் கொள்கையில்? குமுறும் கல்வியாளர்கள்!

இதில் நாங்கள் பரிந்துரை செய்யாத பல அம்சங்கள் உள்ளன. தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமே இல்லை. தமிழக அரசின் தற்போதைய திட்டங்கள், செயல்பாடுகள் என சொல்லப்பட்டு உள்ளது.

மாநில கல்விக் கொள்கை உருவாக்கலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், மாற்றங்கள் குறித்து கல்வியாளர்கள் வேதனையில் இருப்பதாக, மூத்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறி உள்ளதாவது:

’’ஒன்றை உருவாக்க முடியவில்லை என்றால், அதை ஒத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி ஒத்துக் கொள்ளும் பட்சத்தில்தான், அதற்கான தடைகளை முறியடித்து, சாதிப்பது எப்படி? என திட்டமிட்டு செயலாற்ற முடியும்!

தமிழ்நாட்டிற்கு என மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் தடபுடலாக வெளியிட்டுள்ளார். அதைக் கண்டு அந்த கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கல்வியாளர்கள் கமிட்டியே அதிர்ந்துள்ளது.

“தமிழக அரசிடம் நாங்கள் கொடுத்த மாநில கல்விக் கொள்கை ஓராண்டு கிடப்பில் போடப்பட்டு, தற்போது வெளியானதாக அறிந்தோம். ஆனால், இது, நாங்கள் அளித்த அறிக்கையே அல்ல. இதில் நாங்கள் பரிந்துரை செய்யாத பல அம்சங்கள் உள்ளன. தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமே இல்லை. தமிழக அரசின் தற்போதைய திட்டங்கள், செயல்பாடுகள் என சொல்லப்பட்டு உள்ளது.

 

உயர் கல்வியை தவிர்த்துவிட்டு, பள்ளிக் கல்விக்கு மட்டும் ஏன் தனியாக கல்விக் கொள்கை வெளியிட்டனர் என்றும் தெரியவில்லை. வெளியீட்டு விழாவுக்கும் எங்களை அழைக்கவில்லை” என்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை வடிவமைத்த கல்வியாளர்கள் சிலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆக, கல்வி குழு ஒன்றை நியமித்து, அதற்கு நிதி ஒதுக்கி வேலை வாங்கி கல்வி கொள்கை திட்டம் உருவான பிறகும், அதை வெளிட தாமதித்து, அதன் பிறகு சம்பந்தமே இல்லாமல் ஒன்று வெளியாகி உள்ளது.

என்ன காரணம்?

ஏன் இந்த சூழல்? ''கல்வி என்பது ’கன்கரண்ட் லிஸ்ட்’ எனப்படும் மத்திய – மாநில அரசு இரண்டும் சேர்ந்து முடிவு செய்யும் பட்டியலில் உள்ளதாம். அதனால், தமிழ் நாட்டுக்கு என்று தனியாக ஒன்றை நாம் உருவாக்கி செயல்படுத்தக் கூடாது என பாஜக அரசின் தரப்பில் கடும் நிர்பந்தம் தரப்பட்டு உள்ளதன் விளைவே இது'' கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படியானால், அந்த கொடும் நிர்பந்தத்தை பொதுவெளியில் அறிவித்து போராட்டத்தை முன்னெடுத்திருக்கலாம். குறைந்தபட்சம் அதிருப்தியையாவது வெளிப்படுத்தி இருக்கலாம்.

கல்வியானது இரு அரசுக்குமான பட்டியலில் இருந்தாலும், தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை பள்ளிக் கல்வியில் இது வரை நடைமுறையில் இருந்ததுதான். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில்தான், இதில் மத்திய அரசின் தலையீடுகள் அதிகரித்து பிஞ்சு குழந்தைகளின் ஆரம்ப கல்வி தொடங்கி, தங்கள் ஆதிக்க கரத்தை நீட்டிவிட்டனர்.

தேசிய கல்விக் கொள்கையை டிங்கரிங் செய்த திமுக அரசு

ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால், அதை மறுதலித்திருக்க வேண்டிய திமுக அரசு, அதை மாற்றுப் பெயர்களில் இல்லம் தேடிக் கல்வி, நம்ம ஸ்கூல் நம்ம பவுண்டேஷன், மாடல் ஸ்கூல்ஸ், எமிஸ் பதிவேற்றம் எல்லாமே தேசிய கல்விக் கொள்கையை டிங்கரிங் செய்து, முலாம் பூசி அறிமுகப்படுத்தி வருவதே...!

இதுவரை இல்லாத வகையில் கடந்த ஓராண்டாக அரசுப் பள்ளிகளில் கமுக்கமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது UDISE updates என்ற நடைமுறை. இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்களின் சகல விபரங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துச் சென்று விட்டனர். இது தேசியக் கல்விக் கொள்கை வரைவில் கூறப்பட்டுள்ளபடி நாடு முழுவதும் ஒரே கல்வியாக்கும் அம்சமாகும். இதைத்தான் தமிழக அரசு மும்முரமாக செயல்படுத்தி தருகிறது.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகத்தில் ‘சனாதன தருமம் அழிவில்லாத நிலையான அறம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது எப்படி?

ஆக, வெளியில் சொல்வதொன்றும், நடைமுறை செயலாக்கத்தில் முற்றிலும் வேறொன்றாகவும் வெளிப்படுவதை எப்படி புரிந்து கொள்வது?

இரு மொழிக் கொள்கை, 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து, 3,5,8 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு ரத்து, காலநிலை மாற்றக் கல்வி போன்ற ஒரு சில வரவேற்கத்தக்க அம்சங்களைத் தவிர்த்து, மற்ற அனைத்தும் தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களே.

முக்கியமாக சனாதனக் கல்வியை மறுத்தல், கல்வித் துறையில் கார்ப்பரேட் ஊடுருவலைத் தவிர்த்தல், இந்துத்துவ சக்திகள் நுட்பமாக பள்ளிக் கல்விக்குள் ஆதிக்கம் செலுத்தி வருவதை தடுத்தல், தமிழ் வழிக் கல்விக்கான தடைகளை தகர்த்தல், கல்வி மையப்படுத்தப்பட்ட அதிகாரமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு போன்றவை இதில் கிஞ்சித்தும் இல்லை’’ என்று மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பொன்னான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.. 2026-27ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு!
பொன்னான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.. 2026-27ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு!
கல்வியில் சாதித்த தமிழ்நாடு: IIT, வெளிநாட்டு கனவுகளை நனவாக்கிய 2500+ அரசுப்பள்ளி மாணவர்கள்!
கல்வியில் சாதித்த தமிழ்நாடு: IIT, வெளிநாட்டு கனவுகளை நனவாக்கிய 2500+ அரசுப்பள்ளி மாணவர்கள்!
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nallakannu Health: தீயாய் பரவும் தகவல்.. நல்லக்கண்ணு உடல்நிலை எப்படி இருக்கு?
Nallakannu Health: தீயாய் பரவும் தகவல்.. நல்லக்கண்ணு உடல்நிலை எப்படி இருக்கு?
Gold and silver rate : தங்கம் சவரனுக்கு ரூ.4,080 உயர்வு.! வெறும் 4 நாட்களில் புதிய உச்சம்- நகைப்பிரியர்கள் ஷாக்
தங்கம் சவரனுக்கு ரூ.4,080 உயர்வு.! வெறும் 4 நாட்களில் புதிய உச்சம்- நகைப்பிரியர்கள் ஷாக்
TN Weather Update: குளிருக்கு Bye Bye.! சுட்டெரிக்க ரெடியாயிடுச்சு சூரியன்; ரெடி ஆகுங்க; கோடை எப்போ தொடங்குது தெரியுமா.?
குளிருக்கு Bye Bye.! சுட்டெரிக்க ரெடியாயிடுச்சு சூரியன்; ரெடி ஆகுங்க; கோடை எப்போ தொடங்குது தெரியுமா.?
அதிமுக, அமமுக மட்டும் தான்.. சசிகலாவுக்கு இடமில்லை.. டிடிவி தினகரன் விமர்சனம்!
அதிமுக, அமமுக மட்டும் தான்.. சசிகலாவுக்கு இடமில்லை.. டிடிவி தினகரன் விமர்சனம்!
VK Sasikala: நான் ஜெயலலிதாவை கொன்றேனா? - இதுதான் நடந்துச்சு.. ஓபனாக பேசிய சசிகலா!
VK Sasikala: நான் ஜெயலலிதாவை கொன்றேனா? - இதுதான் நடந்துச்சு.. ஓபனாக பேசிய சசிகலா!
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
ABP NADU Exclusive: ஆலங்குடிக்கு செய்தது என்ன? சாதனைகளை அடுக்கிய அமைச்சர் மெய்யநாதன்- ஏபிபி நாடுக்கு சிறப்பு பேட்டி
Porur to Vadapalani Metro Rail : போரூர் டூ வடபழனி மெட்ரோ ரயில் ரெடி.! இன்று வெளியாகிறது.? சென்னை மக்கள் எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு
போரூர் டூ வடபழனி மெட்ரோ ரயில் ரெடி.! இன்று வெளியாகிறது.? சென்னை மக்கள் எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
ABP Nadu Exclusive: நடைபயணம், மக்கள் சந்திப்பு, இளையராஜா பாடல்கள்.. அமைச்சர் மெய்யநாதனின் காலைப் பொழுது இப்படித்தான்!
Embed widget