மேலும் அறிய
Thiruvarur Chariot Festival : ஆரூரா தியாகேசா.. முழக்கமிட்டு திருவாரூர் தேரை வடம்பிடித்து இழத்த பக்தர்கள்!
Thiruvarur Chariot Festival : உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் தொடங்கிய நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

திருவாரூர் ஆழித்தேர் திருவிழா
1/7

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்கி வருகிறது. திருவாரூர் தியாகராஜர் கோவில் 5 வேலி பரப்பளவைக் கொண்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என போற்றப்படும் பெருமை வாய்ந்த இந்தத் தேரின் உயரம் 96 அடியும் 350 டன் எடை ஆகும்.
2/7

வருடா வருடம் பங்குனி உத்திரத்தில் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆழித்தேரோட்டத்திற்காக பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
3/7

மேலும் அதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக தேரின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, வேளாகுறிச்சி ஆதினம் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட இந்த தேரினை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்
4/7

இந்த திருவிழாவை காண்பதற்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கும் பொழுது ஆரூரா தியாகேசா என முழக்கமிடும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
5/7

இந்த தேரோட்டத் திருவிழாவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 2000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நான்கு வீதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
6/7

குறிப்பாக குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதேபோல நான்கு வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள், அமைக்கப்பட்டுள்ளது.
7/7

திருவாரூர் நகராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், தற்காலிக கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேருக்கு பின்புறம் மருத்துவ குழுவினர் அடங்கிய அவசர ஊர்தி வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Published at : 21 Mar 2024 11:34 AM (IST)
Tags :
Thiruvarurமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion