மேலும் அறிய

தஞ்சை மாவட்ட மாணவ, மாணவிகளே உங்கள் கவனத்திற்கு... வாய்ப்பை மிஸ் பண்ணீடாதீங்க!!!

அறிவியல்பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர்: விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. வரும் மே 5ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளதாவது:  பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல்பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் கடந்த 17.04.2025 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7ம். 8ம், 9ம் மற்றும் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் வரும் 05.05.2025 அன்று மாலை 5 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய செல்போன் 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரத்தினை பெற்று கொள்ளலாம்.

விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் 07.05.2025 அன்று காலை 7 மணியளவில் ஆண்களுக்கும், 08.05.2025 அன்று காலை 7 மணியளவில் பெண்களுக்கும் கீழ்காணும் விபரப்படி நடைபெற இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான தகவல்கள் குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் விண்ணப்பம் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள். 05.05.2025 மாலை 5 மணி ஆகும்.

தேர்வில், மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி தேர்வுப் போட்டிகளில் தடகளம், கால்பந்து, வளைக்கோள் பந்து, கைப்பந்து, கபடி, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளுக்கு ஆண்களுக்கு 07.05.2025 காலை 7 மணி அளவிலும், பெண்களுக்கு 08.05.2025 காலை 7 மணி அளவிலும் அன்னை சத்யா விளையட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.

கீழ்காணும் விளையாட்டுக்கு நேரடியாக மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 12.05.2025 அன்று கீழ்காணும் விபரப்படி நடைபெறும். குத்துச்சண்டை , வாள் விளையாட்டு, ஜீடோ,  ஜவஹர்லால் நேரு, விளையாட்டரங்கம், சென்னையில் 12.05.2024 அன்று காலை 7 மணியளவில் நடைபெறும். பளுதூக்குதல், அன்னை சத்யா விளையாட்டரங்கம், தஞ்சாவூரில் 12.05.2024 அன்று காலை 7 மணியளவில் நடைபெறும்.

தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாவட்ட, மாநில அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் (அல்லது) தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் பதங்கங்கள் பெற்றவர்களும் மற்றும் கலந்து கொண்டவர்களும் மாவட்ட மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

மேலும் தகவல் பெற ஆடுகள தகவல் தொடர்பு மைய செல்போன் எண் 9514000777 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்றுக்கொள்ளலாம். தேர்வுப் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்படமாட்டாது.

எனவே. 2025-26 ஆம் ஆண்டிற்கு விளையாட்டு விடுதியில் சேர்வதற்கு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?
Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’  லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?
‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’ லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?
Embed widget