மேலும் அறிய

'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் ரூ. 30 லட்சம் நிதி உதவி

நிதி உதவிக்கான காசோலையை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அரசின் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய தொழிலதிபர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

கரூரில் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரிடம் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் ரூபாய் 30 லட்சம் நிதி உதவி வழங்கினர்.

கரூரில் பிரபலமாக செயல்பட்டு வரும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் சார்பில், அந்த நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து கரூர் ஜவுளி பூங்கா தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தலைமையில், ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை  நேரில் சந்தித்து "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் தலா 10 லட்சம் வீதம் 30 லட்சம் நிதி உதவி வழங்கினர். நிதி உதவிக்கான காசோலையை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அரசின் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய தொழிலதிபர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

 


நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் ரூ. 30 லட்சம் நிதி உதவி

 

இதில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு அரசு பணி திட்டத்திற்காக இந்த நிதியை வழங்கி உள்ளார்கள்.  அடிப்படையில், அட்லஸ் டெக்டைல்ஸ் நிறுவனம் க.பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை  கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ 10 லட்சமும், ஏசியன் பேப்ரிக்ஸ் நிறுவனம் ஓலப்பாளையம் அரசு மருத்துவமனை கட்டுமான பணிக்கு ரூ 10 லட்சமும், சிந்தசிஸ் நிறுவனம் கரூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 படுக்கைகளும், நான்கு கழிவறைகள் கட்டுவதற்கு ரூ.10 லட்சமும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். 

இந்த நிதியில் ஒவ்வொரு திட்டத்திற்கும் வழங்கிய தொகைக்கு இருமடங்காக அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்படும். அதன் அடிப்படையில் அரசு 60- லட்சம் ஒதுக்கீடு செய்யும். மொத்தம் 90 லட்சத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

2021-22 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் அதிக சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கிய முதல் மூன்று  வங்கிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர்  பிரபு சங்கர்  வழங்கினார்கள்

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (17.03.2023) நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் நிலைக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்,இ.ஆ.ப., அவர்கள் 2021-22 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் அதிக சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கிய முதல் மூன்று  வங்கிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

 

 


நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் ரூ. 30 லட்சம் நிதி உதவி

 

2021-22 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் அதிக சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு முதல் பரிசும், இரண்டாம் பரிசு  திருச்சிராப்பள்ளி  மாவட்ட  மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூன்றாம் பரிசு இந்தியன் வங்கிக்கும் விருது மற்றும் சானறிதழ்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்

2021 - 22 ஆம் ஆண்டு அதிக அளவில் மகளிர் திட்ட சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியது மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு சராசரியாக வழங்கப்பட்ட கடன் தொகை அடிப்படையிலும் மாவட்ட அளவில் முதல் பரிசு குளித்தலை இந்தியன் வங்கி ரூபாய் 15,000 காசோலையும் விருது மற்றும் சான்றுகளும், , இரண்டாம் பரிசு பஞ்சமாதேவி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூபாய் 10,000க்கான காசோலை.  விருது மற்றும் சான்றுகளும் மூன்றாம் பரிசு கரூர் எச்டிஎப்சி ரூபாய் 5000 காசோலை விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.


2021 22 ஆம் ஆண்டில் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிய தரகம்பட்டி, தோகைமலை, நெய்தலூர், லாலாபேட்டை, பள்ளப்பட்டி ஆகிய  இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கும், தென்னிலை பாரத மாநில வங்கி,  காவல்காரன்பட்டி பேங்க் ஆப் இந்தியா வங்கி, சேங்கல் இந்தியன் வங்கி,  பால விடுதி ,கிருஷ்ணராயபுரம், வடசேரி, திருக்காம்புலியூர் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி என மொத்தம் 15 வங்கி கிளைகளுக்கு சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்கள் 

 


நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் ரூ. 30 லட்சம் நிதி உதவி

 

இந்நிகழ்வில் ஐ.ஓ.பி. முதன்மை மண்டல மேலாளர் ஜார்ஜ் பாபு லாசர்,  திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.சீனிவாசன், மாவட்ட  முன்னோடி வங்கி மேலாளர் வசந்தகுமார், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மணிகண்டன் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.