மேலும் அறிய

“மேகதாது அணை விவகாரம்: மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவு”- அன்புமணி குற்றச்சாட்டு

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு கர்நாடகவிற்கு  ஆதரவாக செயல்படுகிறது  என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அளக்குடி கிராமத்தில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று ஆய்வு மேற்கொண்டார். கடந்த அதிமுக, திமுக ஆட்சிக்காலத்தில் அக்கறை ஜெயகொண்டபட்டினம்-அளக்குடி இடையே தடுப்பணை கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். 


“மேகதாது அணை விவகாரம்: மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவு”- அன்புமணி குற்றச்சாட்டு

அப்போது அவர் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உட்புகும் விதை தடுக்கும் விதமாக ஆலங்குடி பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட கால கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் சுமார் 72 கிலோ மீட்டர் அளவிற்கு கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி இப்பகுதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு இப்பகுதியில் போராட்டம் நடத்தினேன். அதன் விளைவாக ஆதனூர் குமாரமங்கலம்  இடையே ஒரேயொரு தடுப்பணை அறிவித்தது. தற்போது 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் இப்பகுதியில் தடுப்பணை கட்டுவது தொடர்பான ரூ.580 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  உடனடியாக இதனை தொடங்க வேண்டும்.


“மேகதாது அணை விவகாரம்: மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவு”- அன்புமணி குற்றச்சாட்டு

மேலும், கொள்ளிடம்  மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகள் இடையே அதிகளவில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். டெல்லியில் உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று ஒரு கூட்டத்தை கூட்ட திட்டமிட்டிருந்தார்கள். இதில் கர்நாடக அரசு மேகதாது அணை தொடர்பாக கொடுத்த திட்ட அறிக்கையை விவாதிக்க திட்டமிட்டிருந்தனர். இந்த கூட்டம் இருபத்தி மூன்றாம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


“மேகதாது அணை விவகாரம்: மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவு”- அன்புமணி குற்றச்சாட்டு

இந்தக் கூட்டம் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி தடை வாங்க வேண்டும். ஏனென்றால், இது சட்டத்திற்கு எதிரானது‌. தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடகாவில் காவிரிப் படுகையில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. இதனை விவாதிக்க காவிரி நீர் மேலாண்மைக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் கர்நாடகாவில் பாஜக ஆட்சி இருப்பதால் அவர்களுக்கு  சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என குற்றம்சாட்டினர்.


“மேகதாது அணை விவகாரம்: மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவு”- அன்புமணி குற்றச்சாட்டு

மேலும் தொடர்ந்து பேசியவர், “கொள்ளிடம் ஆற்றில் முன்பு 60, 70 அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டது. அப்போது எனது தலைமையில் பெரிய போராட்டம் நடத்தி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இருந்து மணல் எடுக்கக்கூடாது, எடுக்கவும் விடமாட்டேன், தேவைப்பட்டால்  நானே வந்து போராடுவேன்” என்றார்.

தற்போது கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள மணல் குவாரியில் இருந்து மணல் எடுக்கப்பட்டு பாமக நிர்வாகிக்கு சொந்தமான இடத்தில் கிடங்கு அமைந்து விற்பனை செய்யப்படுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு? “சும்மா இதுபோன்று பேச கூடாது” என செய்தியாளரிடம் கோபப்பட்ட அன்புமணி ராமதாஸ், மணல் எடுப்பவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து -  ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து - ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Embed widget