மேலும் அறிய

வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!

கண்ணாடி அணியும் மாணவர்கள், இப்படி பக்கவாட்டில் திரும்பும்போது, கண்ணாடியின் மையப் பகுதியில் (Optic Centre) பார்க்காமல், அதன் ஓரப் பகுதியின் வழியே பார்க்க நேரிடும்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், ஒன்றன்பின் ஒன்றாக உள்ள இருக்கை முறைக்கு பதிலாக, ப வடிவ இருக்கை முறை அறிமுகம் செய்யப்படுவதாக, அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி ’’மாணவர்களில், கடைசி இருக்கை மாணவர்கள் இருக்க மாட்டார்கள், கவனச் சிதறல் இருக்காது, கற்றல் திறன் மேம்படும்’, குழு விவாதம், வினா விடை அமர்வுகள், சக கற்றல் ஆகியவற்றை ஊக்குவிக்கும்.
பிற மாணவர்கள் சக மாணவர்களிடம் பேசவும் பார்க்கவும் உதவும், ஆசிரியர்கள் எளிதில் மாணவர்களுடன் கலந்துரையாட முடியும், வகுப்பறை பங்கேற்றலை உறுதி செய்யும்’’ என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்து இருந்தது. எனினும் ப வடிவ இருக்கை முறை, பல்வேறு பிரச்சினைகளுக்கு வித்திடும் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

ஆசிரியர்களை முறையாக நியமனம் செய்யுங்கள்

இதுகுறித்து எதிர்க் கட்சிகளான பாஜக, பாமக உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்து இருந்தன. இருக்கை முறையை மாற்றுவதற்கு பதில், ஆசிரியர்களை முறையாக நியமனம் செய்யுங்கள் என்று அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். மேலும் இந்த முறையால் உடல்நல மற்றும் கல்விசார் சிக்கல்கள் ஏற்படும் என்று பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சூர்யா எச்சரித்து இருந்தார்.

”ப வடிவ அமைப்பின் பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் மாணவர்கள், கரும்பலகையைப் பார்க்க வேண்டுமானால், நாள் முழுவதும் தங்கள் கழுத்தையும், தோள்பட்டையையும் ஒரே பக்கமாகத் திருப்பி வைத்திருக்க வேண்டும். இந்த தொடர்ச்சியான அழுத்தம், கடுமையான கழுத்து வலி, தோள்பட்டை வலியோடு நின்றுவிடாமல், எதிர்காலத்தில் குணப்படுத்தக் கடினமான 'செர்விக்கல்' (Cervical Spondylitis) தண்டுவடப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

கண்ணாடி அணியும் மாணவர்களுக்குக் கூடுதல் பாதிப்பு

கண்ணாடி அணியும் மாணவர்கள், இப்படி பக்கவாட்டில் திரும்பும்போது, கண்ணாடியின் மையப் பகுதியில் (Optic Centre) பார்க்காமல், அதன் ஓரப் பகுதியின் வழியே பார்க்க நேரிடும். இது அவர்களின் கண்களுக்குக் கூடுதல் அழுத்தத்தைக் (Eye Strain) கொடுத்து, பார்வைத் திறனை மேலும் பாதிக்கும், கடுமையான தலைவலியை உருவாக்கும்’’ என்று கூறி இருந்தார்.


வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!

இந்த நிலையில், ப வடிவ இருக்கை முறையில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து 24 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியரும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட மகளிரணிச் செயலாளருமான உமா மகேஸ்வரி ஏபிபி நாடுவிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

எல்லா இடங்களுக்கும் பொருந்தாது

’’வகுப்பறைகளில் ’ப’ வடிவ இருக்கை முறை எல்லா இடங்களுக்கும் பொருந்தாது. தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் இதைச் செயல்படுத்த மாட்டார்கள்.

போதிய இட வசதி இல்லாத அரசுப் பள்ளி வகுப்புகளில் இதனால், உடலளவிலும் மனதளவிலும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். அரசுப் பள்ளி வகுப்புகளில் குறைந்தபட்சம் 50 பேர் படிக்கிறார்கள் எனும்போது, கடும் சிரமத்தை ஏற்படுத்தும்.

ப வடிவ இருக்கை முறை எங்கெலாம் பயன்படும்?

இந்த இருக்கை முறை கதை சொல்லவும் விளையாடும் நேரங்களிலும் பயன்படும். வகுப்பறைக் கற்றலுக்கு ஒத்துவராது. தனி நாற்காலி இருந்தால் வேண்டுமானால் இந்த முறை சரியாக இருக்கும். பெஞ்ச் வடிவ இருக்கைகளில் முதுகு தண்டுவடத்தை திருப்பிக்கொண்டே மாணவர்கள் அமர்ந்திருக்க வேண்டும் என்பதால் கழுத்து வலி, பின்புற வலி உண்டாக வாய்ப்புண்டு. கண் பிரச்சினை கூட ஏற்படலாம்.

கரும்பலகையைப் பயன்படுத்தக் கூடிய வகுப்பறை கற்றலுக்கு, இந்த முறை உதவவே உதவாது. உரையாடலுக்கு, பாட்டுப் பாட, நடிக்க மட்டுமே உதவும்.

பழைய இருக்கை நடைமுறையில் பிரச்சினைகள் உண்டு என்று அறிவியல்பூர்வமாகவோ, மருத்துவ ரீதியாகவோ யாரும் எதுவும் கூறவில்லை. இது தோல்விகரமான மாடல் என்று யாரும் சொன்னதில்லை’’ என்கிறார் ஆசிரியை உமா மகேஸ்வரி.

சாதிய ரீதியில் அமர வைக்கப்படும் மாணவர்கள்?

வகுப்பறைகளில் சாதிய ரீதியில் மாணவர்கள் அமர வைக்கப்படுவதாகவும் பின் வரிசை மாணவர்கள் கற்றலில் போதிய கவனம் செலுத்துவதில்லை எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே என்று கேட்டதற்கு,


வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!

அப்படிப் பார்த்தால் முன்னால் உட்கார்ந்திருக்கும் குழந்தைகளுக்கும் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக வகுப்புகளில், உயரம் அதிகமான குழந்தைகளைத்தான் பின்னால் அமர வைக்கிறோம். கவனம் கொடுக்க வேண்டிய குழந்தைகளை முன்னால்தான் உட்கார வைப்போம்.

சாதிய ரீதியாக குழந்தைகளை அமர வைப்பதாக என் 30 ஆண்டு கால அனுபவத்தில் நான் பார்த்ததில்லை. அரசுப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்தான் அதிகம் படிக்கிறார்கள் எனும் நிலையில், அதற்கு வாய்ப்பு குறைவே.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால், கடைசி பெஞ்ச் மாணவர்கள் நன்றாகப் படிக்காதவர்கள் என்ற கருத்துருவாக்கம் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் அப்படிப்பட்ட சூழல் இல்லை.

அரசு என்ன செய்ய வேண்டும்?

பள்ளி வகுப்பறைகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத சூழல்தான் உள்ளது. இருந்தாலும் பல்வேறு வகையான பயிற்சிகளுக்கு அவர்கள் செல்ல வேண்டியுள்ளது. பள்ளிகளுக்கு உள்ளே இருக்கக் கூடிய விஷயங்களால்தான் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. அதை சரிசெய்தாலே போதும்.

ப வடிவ இருக்கை முறை சாத்தியமில்லையா?

பெரிய வகுப்பறைகள், தனித்தனி இருக்கைகள், வகுப்பறைக்கு 20 மாணவர்கள் என்றால் மட்டுமே இந்த இருக்கை முறை சரியாக இருக்கும். சாத்தியப்படும்’’ என்று அரசுப்பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

அரசு ஒரு திட்டத்தைப் புதிதாக அறிமுகம் செய்யும்போது, அதன் சாதக, பாதகங்களை தீர அலசி, ஆராய்ந்து பார்த்த பிறகே அமல்படுத்த வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
ஜிப்மர் முதுநிலை செவிலியர் நுழைவுத் தேர்வு: 124 இடங்களுக்கு கடும் போட்டி, முடிவுகள் ஆகஸ்டு 10!
ஜிப்மர் முதுநிலை செவிலியர் நுழைவுத் தேர்வு: 124 இடங்களுக்கு கடும் போட்டி, முடிவுகள் ஆகஸ்டு 10!
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைனில் ஒரு கிக்... ஹாஸ்டலில் ஒரு சீட்! மயிலாடுதுறை அரசு சமூகநீதி விடுதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget