மேலும் அறிய

Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து - ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை

Air Flight Crash Report: அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே இரண்டு இன்ஜின்களும் செயலிழந்ததே, ஏர் இந்தியா விமான விபத்திற்கு காரணம் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Air Flight Crash Report: அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானம், 32நொடிகள் மட்டுமே காற்றில் பறந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து - காரணம் என்ன?

கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்திய விமானத்தின் கோர விபத்து தொடர்பாக,  விமான விபத்து புலனாய்வுப் பணியகம் நடத்திய முதற்கட்ட விசாரணையின் 15 பக்க அறிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளன. அது ஏற்கனவே துறைசார் வல்லுநர்கள் எழுப்பிய சந்தேகம் ஒன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, தரையிலிருந்து புறப்பட்ட சில விநாடிகளிலேயே இரண்டு இன்ஜின்களும் செயலிழந்துள்ளன. அதாவது, இன்ஜின்களுக்குள் எரிபொருள் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள், ஒன்றன் பின் ஒன்றாக, ஒரு நொடி இடைவெளியில் 'ரன்' நிலையிலிருந்து 'கட்ஆஃப்' நிலைக்கு மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக காக்பிட் ஆடியோ ரிக்கார்டரில், ”ஏன் துண்டித்தீர்கள்” என ஒரு விமானி கேட்பது, ”நான் துண்டிக்கவில்லை” என மற்றொரு விமானி பதிலளித்து இருந்ததும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

பறவைகள் மோதியதா?

சுவிட்சுகள் 'CUTOFF' க்கு மாறியதால், இன்ஜின்களுக்கு ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை என்பது, விரிவான அறிக்கையில் முக்கிய பிரச்னையாக குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகள், விமானம் புறப்பட்ட உடனேயே ஆரம்ப ஏறுதலின் (Initial Takeoff) போதே ராம் ஏர் டர்பைன் (RAT) பயன்படுத்தப்படுவதைக் காட்டியது. விமானப் பாதையின் அருகே குறிப்பிடத்தக்க பறவைகளின் நடமாட்டம் எதுவும் இல்லை. விமான நிலைய சுற்றுச் சுவரைக் கடப்பதற்கு முன்பே விமானம் உயரத்தை இழக்கத் தொடங்கியது.  விபத்தில் சிக்குவதற்கு முன்பாக அந்த விமானம் வெறும் 32 நொடிகள் மட்டுமே காற்றில் பறந்ததும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டு வராத இன்ஜின்-2

நிலையை புரிந்து கொண்டு இரண்டு கட்-ஆஃப் சுவிட்சுகளும் மீண்டும் 'RUN' நிலைக்கு நகர்த்தப்பட்டதையும், முதல் இன்ஜின் மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டியபோதும், இரண்டாவது இன்ஜின் மீள முடியாமல் போனது பிளாக் பாக்ஸ் எனப்படும் கருப்பு பெட்டியில் இருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதற்கு முன்பு, விமானம் 0.9 கடல் மைல்கள் மட்டுமே பயணித்ததாகவு, விபத்து பிற்பகல் 1.39 மணிக்கு நிகழ்ந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசவேலைக்கான அறிகுறிகள்:

விமான விபத்தில் நாச வேலைக்கான அறிகுறிகள் எதுவும் தற்போது வரை தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “ விபத்து நடந்த நேரத்தில் வானிலை பிரச்சினைகள் எதுவும் இல்லை. வானம் தெளிவாக இருந்தது, தெரிவுநிலை நன்றாக இருந்தது, காற்று அதிகமாக இல்லை. எரிபொருளிலும் எந்தவித கலப்படமும் இன்றி தூய்மையாகவே இருந்தது. விமானிகள் மருத்துவ ரீதியாகவும் உடல் தகுதியுடனும் ஓய்வெடுத்திருந்தனர், மேலும் அந்த வகை விமானங்களை ஓட்டுவதில் போதுமான அனுபவத்தையும் பெற்றிருந்தனர்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த மோசமான விமான விபத்தாக கருதப்படும் அகமதபாத் விபத்தில்,  விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உட்பட மொத்தமாக 270 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget