மேலும் அறிய

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 95 சதவீத நகைகள் மீட்பு - துணை ஆணையாளர் பேட்டி

நகைகளை மறைத்து வைத்திருந்த விஜயின் மாமியார் யோகராணி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ தங்கம், வைரம், பிளாட்டிணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் கிளை, கோவை காந்திபுரம் நூறடி சாலையில் இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கடைக்கு, தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 27 ம் தேதியன்று இரவு ஊழியர்கள் பணி முடித்து, வழக்கம் போல கடையை மூடி விட்டு சென்றுள்ளனர். பின்னர் இன்று காலையில் வழக்கம் போல கடை ஊழியர்கள் வந்து கடையை திறந்த போது, தங்கநகைகள், வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, கடையின் ஏசி வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்த பகுதி வழியாக உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் கடைக்குள் உள்ளே நுழைந்த நபர் கண்காணிப்பு கேமரா முன்பு சட்டையில் முகத்தை மறைத்த மாதிரி சென்றதும், அவரது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததும் தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ரத்தினபுரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட  95 சதவீத நகைகள் மீட்பு - துணை ஆணையாளர் பேட்டி

முதற்கட்ட தகவலின் அடிப்படையில் 2 கிலோ தங்க நகைகள், வைரம், பிளாட்டிணம், வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. புலன் விசாரணையில் 4 கிலோ 600 கிராம் தங்க நகைகள், வைரம், பிளாட்டிணம், 700 கிராம் வெள்ளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தருமபுரியை சேர்ந்த விஜய் என்பவர் கொள்ளையில் ஈடுபட்டதும், அவர் ஆனைமலை பகுதியில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் விஜயை பிடிக்க ஆனைமலை பிடிக்க சென்ற போது, வேறொரு வழக்கில் கைது செய்ய தருமபுரி காவல் துறையினரும் வந்துள்ளனர். அப்போது வீட்டின் கூரையை பிரித்து கொண்டு விஜய் தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து விஜய்யின் மனைவி நர்மதாவை கைது செய்த காவல் துறையினர், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய விஜயை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளையடிக்க திட்டமிடவும், நகைகளை மறைத்து வைக்கவும், தப்பி செல்லவும் உதவிய நர்மதா கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தற்போது 3 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நகைகளை மறைத்து வைத்திருந்த தர்மபுரியை சேர்ந்த விஜயின் மாமியார் யோகராணி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ தங்கம், வைரம், பிளாட்டிணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட  95 சதவீத நகைகள் மீட்பு - துணை ஆணையாளர் பேட்டி

இதுதொடர்பாக கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் 4.8 கிலோவிற்கும் மேற்பட்ட தங்கநகைகள், பிளாட்டினம், வைரம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் விஜயின் மனைவி நர்மதா கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று விஜயின் மாமியார் யோகராணி கைது செய்யப்பட்டார். வீட்டிற்கு அருகே தங்க நகைகள் மற்றும் வைரங்களை குப்பைகளிலும், குழி தோண்டி புதைத்தும் மறைத்து வைத்திருந்தார். அவரிடம் இருந்து 1.5 கிலோ தங்கம், வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. விஜயை பிடித்தால் தான் மீதமுள்ள நகைகள் மீட்க முடியும்.

இதுவரை 95 சதவீத நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. 2 அடி துளை வழியாக கடைக்குள் செல்ல முடியுமென திருடனுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவருக்கு யாரோ உதவி செய்துள்ளார்கள். விஜயை பிடித்தால் தான் உதவியது யார் என்பது தெரியும். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது விஜயின் மனைவி குடும்பம் தான் அகதி முகாமில் இருக்கின்றனர். அவர்கள் குறித்து கியூ பிரிவு காவல் துறையினர் மூலம் விசாரணை நடத்தப்படும். நகைக்கடைகளில் கூடுதல் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! திமுக கூட்டத்தில் அக்ரசிவ் மோடில் இறங்கிய ஸ்டாலின்!
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
தேர்தல் கூட்டணிதான்.. பாஜக கொள்கைகளோட சமரசம் கிடையாது - அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
Water Bell: பள்ளிகளில் தண்ணீர் பெல் அறிமுகம்; தினசரி 3 முறை- இது கட்டாயம்! முக்கிய வழிகாட்டல் வெளியீடு
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
சென்னை வரும் அமித்ஷா.. கோவை செல்லும் ஈபிஎஸ்! அதிமுக-பாஜக கூட்டணிக்குள் விரிசல்?
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
பள்ளிகளில் மாணவர்களின் சாதிப்பெயர்கள், வன்முறை.. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து! மின்கட்டண கொள்ளையில் திமுக முதலிடம் - அன்புமணி கடும் கண்டனம்
தமிழக மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து! மின்கட்டண கொள்ளையில் திமுக முதலிடம் - அன்புமணி கடும் கண்டனம்
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
மக்களே! நாளை மறுநாள் முதல் 120 மின்சார பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எவ்ளோ?
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
Poovai Jagan Moorthy: கடத்தல் வழக்கு; பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு.. விரைவில் கைது? வலைவீசும் போலீஸ்
Embed widget