மேலும் அறிய

Crime: காதல் மனைவியை பிரித்து சென்ற பெற்றோர்கள்... சேர்த்து வைக்கக்கோரி காவல் நிலையத்தில் கணவர் புகார்..

"பிரகாஷ்க்கு விபத்து ஏற்பட்டு கால்கள் செயல் இழந்து விட்டதால் திவ்யாவின் பெற்றோர்கள் இவர்களை திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்"

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவனேரியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 25). தொழிற்கல்வி படித்த இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் வள்ளியூர் அருகே உள்ள வள்ளியம்மாள் புரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் திவ்யா (வயது 22)  என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரும் கடந்த ஐந்து வருட காலமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டை சேர்ந்த பெற்றோர்களும் இதனை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.


Crime: காதல் மனைவியை பிரித்து சென்ற பெற்றோர்கள்...  சேர்த்து வைக்கக்கோரி காவல் நிலையத்தில் கணவர் புகார்..

இந்நிலையில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு பிரகாஷ் சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பி உள்ளார். அப்போது விபத்து ஏற்பட்டு அவரது இரண்டு கால்களும் செயல் இழந்துவிட்டன. இரு கால்களும் செயலிழந்த நிலையில் தொடர்ந்து திவ்யாவும், பிரகாஷூம் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரகாஷ்க்கு விபத்து ஏற்பட்டு கால்கள் செயல் இழந்து விட்டதால் திவ்யாவின் பெற்றோர்கள் இவர்களை திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் கடந்த 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனை அறிந்த திவ்யாவின் பெற்றோர் தனது மகளை பிரகாஷ் கடத்தி சென்றதாக வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறியும், காதலர்கள் இருவரும் பிரகாஷின் வீட்டில் வைத்து பிரகாஷின் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.


Crime: காதல் மனைவியை பிரித்து சென்ற பெற்றோர்கள்...  சேர்த்து வைக்கக்கோரி காவல் நிலையத்தில் கணவர் புகார்..

திருமணத்தை கேள்விப்பட்ட திவ்யாவின் பெற்றோர்கள் பிரகாஷின் வீட்டிற்கு  சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.. தொடர்ந்து பிரகாஷை சரமாரியாக தாக்கி வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி  திவ்யாவை தரதரவென அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து பிரகாஷ் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அப்புகாரில் பிரகாஷ் தனது காதல்  மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வள்ளியூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கால்களை இழந்த பிரகாஷுடன் தனது மகள் வாழ்வது சரியல்ல என அவரை தாக்கி அவரிடம் இருந்து அவரது மனைவியான திவ்யாவை அவரது பெற்றோர்கள் பிரித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE Board Exams: 2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...
2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Space X Record: முதன் முறையாக வேறு நாட்டில் ராக்கெட்டை தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை... பிரமிக்க வைக்கும் வீடியோ...
முதன் முறையாக வேறு நாட்டில் ராக்கெட்டை தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை... பிரமிக்க வைக்கும் வீடியோ...
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Board Exams: 2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...
2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Space X Record: முதன் முறையாக வேறு நாட்டில் ராக்கெட்டை தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை... பிரமிக்க வைக்கும் வீடியோ...
முதன் முறையாக வேறு நாட்டில் ராக்கெட்டை தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை... பிரமிக்க வைக்கும் வீடியோ...
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..
Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Flying Train: சென்னையில் வேளச்சேரி டூ பரங்கிமலை இனி பறந்துகிட்டே போகலாம்! ஜுன் முதல் வரும் பறக்கும் ரயில்!
Flying Train: சென்னையில் வேளச்சேரி டூ பரங்கிமலை இனி பறந்துகிட்டே போகலாம்! ஜுன் முதல் வரும் பறக்கும் ரயில்!
Tamilnadu Roundup: திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! கோவை வரும் அமித்ஷா - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup: திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! கோவை வரும் அமித்ஷா - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.