மேலும் அறிய

Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!

திருப்பூரில் கணவனை கட்டிப்போட்டு மனைவியை 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரங்கேறும் பாலியல் குற்றச்சம்பவங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், திருப்பூரில் நடந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஒடிசாவைச் சேர்ந்த பெண்:

தமிழ்நாட்டில் அதிகளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒடிசாவில் இருந்து கணவன், மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரு குடும்பத்தினர் தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வந்துள்ளனர். 

நடந்தது என்ன?

அவர்கள் திருப்பூரில் இருந்து கோவைக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். கோவையில் வேலை பார்த்த அவர்கள் வேலை பிடிக்காத காரணத்தால் ஒடிசாவிற்கு மீண்டும் சென்று விடலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதற்காக திருப்பூரில் அவர்கள் காத்திருந்துள்ளனர். இந்த நிலையில், திருப்பூரில் அவர்களுக்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நதீம், டானிஸ், முர்ஷீக் ஆகிய 3 பேர் அறிமுகமாகியுள்ளனர். 

அவர்கள் தாங்கள் வேலை வாங்கித் தருவதாக அந்த குடும்பத்தினருக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். அவர்களது வார்த்தையை நம்பிய அந்த குடும்பத்தினர் அவர்களுடன் சென்றுள்ளனர். அப்போது, பீகாரைச் சேர்ந்த அவர்கள் 3 பேரும் அந்த குடும்பத்தினருக்கு தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்துள்ளனர். 

கணவன் கண்முன் நடந்த கொடூரம்:

இந்த நிலையில், இரவில் நதீம், டானிஸ், முர்ஷீக் 3 பேரும் இணைந்து கத்தியை காட்டி அந்த குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். பின்னர், அந்த பெண்ணின் கணவரை கட்டிப்போட்டு அவரது முன்னே அவர்கள் 3 பேரும் இணைந்து அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது வெளியில் வந்துள்ளது. 

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரைச் சேர்ந்த நதீம், டானிஸ், முர்ஷீக் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். திருப்பூரில் வட மாநில பெண்ணுக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாலே பாலியல் வன்கொடுமை அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்தடுத்து அரங்கேறும் அவலம்:

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாவே  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் சம்பவங்கள் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை, இசிஆர் சாலையில் இளம்பெண்களை இளைஞர்கள் காரில் துரத்திய விவகாரம், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் என அடுத்தடுத்து அச்சுறுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில் தற்போது திருப்பூரில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy”என்ன தான் இருந்தாலும் நண்பன்”மஸ்க் குறித்து ட்ரம்ப் உருக்கம் முடிவுக்கு வரும் மோதல்? Donald Trump vs Elon Muskவிஜய் பற்றவைத்த நெருப்பு! குடைச்சல் கொடுக்கும் கூட்டணியினர்! தலைவலியில் திமுக, அதிமுக

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...
AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...
Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
Embed widget