மேலும் அறிய

Thai Ammavasai 2025: தை அமாவாசையின் சிறப்புகள என்ன? தர்ப்பணம் கொடுப்பது ஏன்.. முழுவிவரம்

Thai Ammavasai 2025 : தை அமாவாசை என்பது முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாக கருதப்படுகிறது. இறந்தவர்களின் ஆன்மாக்கள் பூமியில் உள்ள தங்கள் உறவினர்களை ஆசிர்வாதிப்பதாக என்கிற நம்பிக்கை உள்ளது. 

தை அமாவாசை தினதமிழர்களின் கலாச்சரத்தில் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இந்த நாள் எதற்காக அனுசரிக்கப்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 

ஒவ்வொரு மாதம் வரக்கூடிய அமாவாசை தினம் உட்பட மஹாளய அமாவாசை, ஆடி அமாவாசை போன்று அனைத்து நாட்களிலும் மறைந்த முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்வது வழக்கமாகும். இதில் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக உள்ளது .

தை அமாவாசை: 

தை அமாவாசை என்பது முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாக கருதப்படுகிறது. இறந்தவர்களின் ஆன்மாக்கள் பூமியில் உள்ள தங்கள் உறவினர்களை ஆசிர்வாதிப்பதாக என்கிற நம்பிக்கை உள்ளது.

இந்த நாளன்று பித்ரு உலகத்தில் இருந்து வரக்கூடிய முன்னோர்கள் 6 மாதங்கள் உலகத்தில் தங்கியிருப்பதாகவும், தை அமாவாசை அன்று நாம் கொடுக்கும் தர்ப்பணத்தை ஏற்றுக்கொண்டு ஆசிர்வதித்து மீண்டும் செல்வார்கள் என்றும் இது மட்டுமில்லாமல் நாம் செய்த பாவங்கள் அனைத்து தீரும் என்கிற நம்பிக்கையும் உள்ளது. 

அன்றைய தினம் பக்தர்கள் புனித நீராடி அன்றைய நாளை தொடங்குகின்றனர். அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஆற்றங்கரையோரம் மற்றும் கடற்கரை பகுதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

இதையும் படிங்க: Thai Amavasai 2025: தை அமாவாசை எப்போது? முக்கியத்துவம் என்ன? விவரம் இதோ!

இராமேஸ்வரம் செல்லக் காரணம்? 

தை அமாவாசை அன்று தங்களின் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதற்காக இராமேஸ்வரத்திற்கு மக்கள் அதிகம் செல்வார்கள். ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நகரிக் அமைந்துள்ள இராமநாதசுவாமி கோவில் தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு ஆசீர்வாதம் வழங்குவார்கள் என்று நம்பப்படுகிறது. 

தை அமாவாசை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளில் இருந்து இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 ராமேஸ்வரம் மட்டுமன்றி ஹரித்வார், பிரயாக் திரிவேணி சங்கம், மற்றும் கன்னியாகுமரி போன்ற புனிதத் தலங்களுக்கு இந்த சடங்குகளைச் செய்ய பக்தர்கள் குவிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

திதி கொடுக்கும் நேரம்: 

 தை அமாவாசை 2025 தேதி: 29 ஜனவரி 2025, புதன்கிழமை

அமாவாசை திதி ஆரம்பம்: 07:35 PM, 28 ஜனவரி 2025

அமாவாசை திதி முடியும்: 06:05 PM, 29 ஜனவரி 2025

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற வெறும் ரூ.50 தான் டிக்கெட்.! சிறப்பம்சம் என்ன.?
கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற வெறும் ரூ.50 தான் டிக்கெட்.! சிறப்பம்சம் என்ன.?
Embed widget