Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் முதல் காதல்; இப்படியா ஆகணும் - அவரே சொன்ன சீக்ரெட்!
சிவகார்த்திகேயன் தனது முதல் காதல் குறித்து மனம் திறந்து பேசியது இப்போது வைரலாகி வருகிறது.

சினிமாவில் உள்ளே திருமணத்திற்கு பின் ஹீரோவாக நடிக்க துவங்கியதால் சிவகார்த்திகேயனை சுற்றி எந்த ஒரு காதல் கிசுகிசுவும் வட்டமடிக்கவில்லை. நடிக்க வருவதற்கு முன்பே தனது அம்மாவின் ஆசைப்படி மாமாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்ட சிவகார்த்திகேயனுக்கு, தற்போது 3 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஆண்டு அமரன் படத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் வேற லெவல் ஹிட்டடித்த நிலையில், தற்போது தன்னுடைய சம்பளத்தை கூட ரூ.50 கோடியாக உயர்த்தி உள்ளார். இந்நிலையில் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், தனது முதல் காதல் குறித்து சிவகார்த்திகேயன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அந்த காதல் ஜெயிக்காமல் போக என்ன காரணம் என்பதை பார்க்கலாம் வாங்க. பொதுவாக ஒருவரின் வாழ்க்கையில் வரும் முதல் காதலை யாராலும் மறக்க முடியாது. ஏனென்றால் முதலில் பூக்கும் காதல் அவர்களுக்கு இனம் புரியாத ஒரு உணர்வை கொடுக்கும். அதே போல் காதல் எல்லோருக்கும் சக்ஸஸ் ஆனதா என்றால் அப்படி இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே முதல் காதல் வெற்றி பெற்றிருக்கும்.
இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது முதல் காதல் அனுபவம் பற்றி பேசி இருக்கிறார். அப்போது அவர் கூறுகையில், "நான் ஒரு பெண்ணை ரொம்ப நாளா காதலித்தேன். ஆனால் அந்த பொண்ணுக்கு இந்த விஷயமே தெரியாது. என்னோட காதல் ஒன்னு சைடு தான். அந்தப் பெண் இன்னொருத்தரை காதலிச்சு, அவர் கூட போயுடுச்சு. அதனால், என்னுடைய காதல் தோல்வியில முடிஞ்சிது.
அதுக்கு அப்பறமா ஒரு நாள் ஷாப்பிங் மால்ல அந்த பெண்ணை நான் பார்த்தேன். ஆனால், காதலித்த பையனோடு அந்த பெண் வரல. இன்னொரு பையனோடு வந்திருந்துச்சு. அப்போ எனக்கு ஒரே சந்தோஷம். எனக்கு கிடைக்காத அந்த பெண், அவனுக்கும் கிடைக்கவில்லை அதனால தான். அதுக்கு அப்பறம் சிங்கிளா இருந்த எனக்கு ஆர்த்தியை கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. இப்போ மனைவியை லவ் பண்ணிட்டு ஹாப்பியா இருக்குறதா சொல்லி இருக்காரு.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

