மேலும் அறிய

Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..

sp koil flyover : " ஜிஎஸ்டி சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் பாலம் இன்று திறக்கப்படுவதால், 20 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்"

singaperumal koil bridge: "சிங்கப்பெருமாள் கோவில் பாலத்தின் ஒரு பகுதி இன்று திறக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்"

ஜிஎஸ்டி சாலை - sp Kovil flyover.

சென்னை மற்றும் தென் தமிழகத்தை இணைக்க கூடிய முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. ஜி.எஸ்.டி சாலை என்று அழைக்கக்கூடிய இந்த சாலையில், லட்சக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. விடுமுறை நாட்களில், வாகனங்கள் செல்வது பல மடங்கு அதிகரிப்பது வழக்கமாக உள்ளது.


Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..

ஜிஎஸ்டி சாலையில், பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டு வரை பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தொடர்ந்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய பாலங்கள் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. 

சிங்கப்பெருமாள் கோவில் :

செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகே பாலம் கட்ட வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது‌. தினமும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் முப்பது முறைக்கு மேல் மூடப்படுகிறது. இதனால் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்த இருபதற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். 


Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..

இதனை கருத்தில் கொண்டு சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இந்தப் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில், பாலம் கட்டப்படும் என அறிவித்திருந்தார். 

கூடுவாஞ்சேரி மற்றும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2006 ஆண்டு இறுதியில் முடிவு எடுக்கப்பட்டன. இதற்கு, அரசு ரூ52.80 கோடி ஒப்புதல் வழங்கி கடந்த 2011 பிப்ரவரி 28ம் தேதி பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்தநிலையில் பெரும்புதூர் பக்கமுள்ள பாலப்பகுதி ( பாலத்தின் தூண் அமைக்கும் பணி) மட்டும் கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் முடிக்கப்பட்டது.

சிங்கப்பெருமாள் கோயில் பாலம் கடந்து வந்த பாதை - singaperumal koil bridge plan

இப்பணிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்று கிடைக்கப்பெறவில்லை. இதனால் பாலம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில், மாமல்லபுரம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை சென்னை எல்லை சாலை அமைக்கும் பணி அறிவிக்கப்பட்டது. 


Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..

இத்திட்டத்துடன் கூடுவாஞ்சேரி- சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியையும் இணைக்க உயர்மட்ட குழுவால் முடிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளில் கழித்து மீண்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த பாலம் 740 மீ நீளம், 7.50 மீ அகலத்தில் சுமார் 1308 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கட்டப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன ? Key Features Of Singaperumal Kovil Flyover 

சென்னை புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாக சிங்கப்பெருமாள் கோயில் இருந்து வருகிறது. சிங்கப்பெருமாள் கோவில் - ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் கனரக வாகனங்கள், சிங்கப்பெருமாள் கோயில் வழியாகவே இந்த சாலையை அடைய முடியும் என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..

தற்போது திருச்சி சென்னை மார்க்கமாக உள்ள பாலத்தின் ஒரு பகுதி திறக்கப்பட உள்ளது. இந்த பாலம் பயன்பாட்டிற்கு வருவதால், பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறைய உள்ளது. இதனால் ரயில்வே கேட் மூடப்பட்டாலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை இருந்து வந்த நிலையில், இந்தப் பாலம் இன்று திறக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே 16 ஆண்டுகளாக கட்டுமானம் நடைபெற்ற ஒரே பாலம் இந்த பாலம்தான் என பொதுமக்கள் விமர்சனத்தையும் முன்வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
Women Self Help Group: பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
Porur - Poonamallee metro train: சென்னை மக்களுக்கு ஹேப்பி.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
Embed widget