அன்பில் மகேஸ் அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது – அண்ணாமலை சொல்லும் காரணம்
அன்பில் மகேஸ் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அன்பில் மகேஸ் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
பள்ளிகளில் மாணவ மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதாகச் சொல்லி மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தப் பள்ளிகளிலும் இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் இல்லை என்பதையே, தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவது காட்டுகிறது. குழந்தைகள் பாதுகாப்புக்கான தேசிய அவசர உதவி எண் 1098க்கு அழைத்ததால் மட்டுமே, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், தொடர்ந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
— K.Annamalai (@annamalai_k) February 19, 2025
பள்ளிகளில் மாணவ மாணவியர்…
பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இத்தனை தொடர் குற்றங்களுக்குப் பிறகும், பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதியோ, தார்மீக உரிமையோ இல்லை.
உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து, திரு. அன்பில் மகேஷ் விலக வேண்டும். முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமித்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் “தமிழ்நாடு தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் நிதி, ஏற்கவில்லை என்றால் நிதி இல்லை. தாய்மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு ஏற்கிறதா இல்லையா? என கேள்வி எழுப்பியிருந்தார். இது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “தேசிய கல்விக் கொள்கைக்கும், சர்வ சிக்ஷா அபியன் திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, நடிகர் அஜித் படத்தில் வருவது போல ஆட்டோ கண்ணாடியை திருப்பினால் தான் ஆட்டோ ஓடும் என்பது போல் இருக்கிறது.
அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தில் மும்மொழிக்கொள்கை பற்றி இல்லை. ஒருவர் வெளிநாட்டிற்கு படிக்க சென்றார். அவர் வாயை திறந்தாலே பொய்தான். நிதி தராமல் இருக்க உங்க அப்பன் வீட்டு பணமா அது. 40 லட்சம் பிள்ளைகளின் எதிர்காலம் இதில் உள்ளது.
நீங்கள் இந்தியாவில் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இங்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை ஏமாற்ற ஒருவன் பிறந்து தான் வர வேண்டும்” என சாடியிருந்தார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

