மேலும் அறிய

Crime: போலி சான்றிதழ்கள் தயாரிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது; 80க்கும் மேற்பட்ட சீல்கள் பறிமுதல் - அதிரவைக்கும் பின்னணி..!

போலிச் சான்றிதழ்கள் மற்றும் போலி ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளை தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட 5 பேரையும் உடனடியாக கைது செய்து 80க்கும் மேற்பட்ட போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் வந்தியதேவன்(வயது 64). இவர் தனது நிலத்துக்கு உரிய பத்திரம் தொலைந்து விட்டதால் அதற்கான நகல் பெற முயற்சி செய்தாராம். இதனால் தனது நண்பரான புதியம்புத்தூரை சேர்ந்த பொன்ராஜ்(66) என்பவரிடம் தெரிவித்தாராம். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு பொன்ராஜ் தனது நண்பர்களாக புஷ்பாநகரை சேர்ந்த அசோகர்(65), மறவன்மடத்தை சேர்ந்த கிறிஸ்டோபர்(56), சிலுவைப்பட்டியை சேர்ந்த இம்மானுவேல்(59), ரகுமத்துல்லாபுரத்தை சேர்ந்த காளீசுவரன்(61) ஆகிய 5 பேருடன் சேர்ந்து ஒரு போலீஸ் மனு ஏற்பு ரசீது கொடுத்து உள்ளார்.


Crime: போலி சான்றிதழ்கள் தயாரிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது;  80க்கும் மேற்பட்ட சீல்கள் பறிமுதல் - அதிரவைக்கும் பின்னணி..!

போலி போலீஸ் மனு:

அந்த மனு ரசீதை பெற்றுக் கொண்ட வந்தியத்தேவன், அதனை உண்மை என்று நம்பி, தென்பாகம் போலீஸ் நிலையத்தில் கொடுத்து ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கான போலீஸ் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்து உள்ளார். அப்போது மனு ரசீதை தென்பாகம் போலீசார் ஆய்வு செய்து உள்ளனர். அது போலியான ரசீது என்பது தெரியவந்து உள்ளது. இதனை அறிந்த வந்தியத்தேவன் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து கொடுத்து இருப்பது தெரியவந்தது.


Crime: போலி சான்றிதழ்கள் தயாரிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது;  80க்கும் மேற்பட்ட சீல்கள் பறிமுதல் - அதிரவைக்கும் பின்னணி..!

உடனடியாக போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்ராஜ், அசோகர், கிறிஸ்டோபர், இம்மானுவேல், காளீசுவரன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Crime: போலி சான்றிதழ்கள் தயாரிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது;  80க்கும் மேற்பட்ட சீல்கள் பறிமுதல் - அதிரவைக்கும் பின்னணி..!

போலி ஆவணங்கள்:

மேலும் போலீசார், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலீஸ் நிலையங்களில் சீல்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மாநகராட்சி ஆணையாளர், தாசில்தார்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகளின் ரப்பர் ஸ்டாம்பு முத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்த பல்வேறு போலிச் சான்றிதழ்கள் மற்றும் 80க்கும் மேற்பட்ட போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி பகுதியில் இன்டர்நெட் சென்டர் நடத்தி வரும் மேலும் 2 பேருக்கும் இதில் தொடர்புள்ளது  தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான பெருமாள், மகாராஜன் மற்றும் இன்டர்நெட் சென்டர் நடத்தி வரும் 2 பேர் என 4பேரை போலீசார் தேடிவருகின்றனர். பல்வேறு போலிச் சான்றிதழ்கள் மற்றும்  போலி ரப்பர் ஸ்டாம்புகளையும் பறிமுதல் செய்த தென்பாகம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Breaking News LIVE, June 5: திடீரென எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன காரணம்?
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
Embed widget