மேலும் அறிய

இனி திரும்பும் இடமெல்லாம் பளபளக்க போகுது திருச்சி. இப்போ என்ன அறிவிப்பு தெரியுங்களா? 

பூங்காக்கள் அமைத்தல், தெருக்களை அழகுப்படுத்துதல், புதிய மரங்கள் நடுதல் போன்ற திட்டங்களுக்குதான் இந்த பட்ஜெடடில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி: அடுத்தடுத்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் திருச்சி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இனி திரும்பும் இடமெல்லாம் பளபளக்க போகுது திருச்சி. இப்போ என்ன அறிவிப்பு தெரியுங்களா? 

திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டில் பூங்காக்கள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கி இருக்காங்க. பற்றாக்குறை பட்ஜெட்தான்... நிதி இல்லைதான்... பற்றாக்குறை இருந்தும், புதிய திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய பூங்காக்கள், பாரம்பரிய விளக்குகள், மரங்கள் நடுதல் போன்ற பணிகளுக்காக ரூ.44 கோடியை ஒதுக்கிய மேயர் மு. அன்பழகன் சிஎஸ்ஆர் நிதி மூலம் இந்த திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதாவது, தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியை பயன்படுத்தி, இந்த திட்டங்களை நிறைவேற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளதாம்.

குறிப்பாக, பூங்காக்கள் அமைத்தல், தெருக்களை அழகுப்படுத்துதல், புதிய மரங்கள் நடுதல் போன்ற திட்டங்களுக்குதான் இந்த பட்ஜெடடில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள அய்யப்பன் கோயில் எதிரே திறந்தவெளி இடத்தை, வெஸ்ட்ரி பள்ளி மற்றும் அலெக்சாண்ட்ரியா சாலை வரை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வில்லியம்ஸ் சாலை மற்றும் தில்லை நகர் ரெட்டை வாய்க்கால் பகுதியில், சாலை ஓரங்களில் பூங்காக்கள் அமைக்க இருக்காங்க. மக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதைகள், திருச்சி சர்வதேச விமான நிலையம் - பீமா நகர் நீதிமன்றம் செல்லும் சாலையில், அடிக்கடி முக்கிய பிரமுகர்கள் சென்று வருகின்றனர். அதனால், அந்த சாலையில் பாரம்பரிய தோற்றமுடைய எல்இடி விளக்குகள் பொருத்த முடிவு செய்து இருக்காங்க.

ஏற்கனவே, திருவானைக்கோவில் சென்னை ட்ரங்க் சாலையில் உள்ள விளக்குகள் போல, இந்த விளக்குகள் இருக்குமாம். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது; "புதிய விளக்குகள் நகரத்தின் அழகை மேம்படுத்தும். அதே நேரத்தில், வெளிச்சம் ஒரே மாதிரி இருக்கும். இது பார்வையாளர்களுக்கு நல்ல தோற்றத்தை கொடுக்கும்" என்றனர். மேலும், 10,000 தெரு விளக்குகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள 20 வாட் எல்இடி விளக்குகளுக்கு பதிலாக, 40 வாட் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும். காவிரி நதிக்கரை மேம்பாட்டு திட்டத்தின் முதல் கட்டமாக, ஓடத்துறை சாலை மற்றும் அம்மா மண்டபம் பகுதிகளில் ரூ. 5 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் பஞ்சப்பூர் பளபளப்பாகும் போது சிட்டியை மட்டும் விட்டுவிடுவோமா என்பது போல் மாநகராட்சி பட்ஜெட் நகரை அழகுப்படுத்த வந்திடுச்சு. மாநகராட்சி பட்ஜெட்டில் உள்ள சில முக்கிய திட்டங்கள் பற்றி பார்ப்போம். 10,000 தெரு விளக்குகளை 20வாட்ஸ் இருந்து 40 வாட்ஸ் எல்இடி ஆக மாற்ற போறாங்க.

வில்லியம்ஸ் சாலை மற்றும் தில்லை நகரில் பூங்காக்கள் அமைக்க ரூ. 10.5 கோடி ஒதுக்கி இருக்காங்க. காவிரி நதிக்கரை மேம்பாட்டு திட்டம் (ஓடத்துறை & அம்மா மண்டபம்) – ரூ.15 கோடி,  குடியிருப்பு பகுதிகளில் 3,450 புதிய எல்இடி விளக்குகள் பொருத்த ரூ.6.5 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிச்சு இருக்காங்க.

ராயல் ரோடு, கண்டோன்மென்ட் பகுதிகளில் சாலை ஓரங்களில் பொது இடங்களை மேம்படுத்துதல் ரூ.10 கோடி என்று நிதி ஒதுக்கீடு செய்து வெளியாகி உள்ள அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. திருச்சி இப்போ திரும்பும் இடமெல்லாம் அழகு திருச்சியாக மாற போகுது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Embed widget