இனி திரும்பும் இடமெல்லாம் பளபளக்க போகுது திருச்சி. இப்போ என்ன அறிவிப்பு தெரியுங்களா?
பூங்காக்கள் அமைத்தல், தெருக்களை அழகுப்படுத்துதல், புதிய மரங்கள் நடுதல் போன்ற திட்டங்களுக்குதான் இந்த பட்ஜெடடில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி: அடுத்தடுத்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் திருச்சி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இனி திரும்பும் இடமெல்லாம் பளபளக்க போகுது திருச்சி. இப்போ என்ன அறிவிப்பு தெரியுங்களா?
திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டில் பூங்காக்கள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கி இருக்காங்க. பற்றாக்குறை பட்ஜெட்தான்... நிதி இல்லைதான்... பற்றாக்குறை இருந்தும், புதிய திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய பூங்காக்கள், பாரம்பரிய விளக்குகள், மரங்கள் நடுதல் போன்ற பணிகளுக்காக ரூ.44 கோடியை ஒதுக்கிய மேயர் மு. அன்பழகன் சிஎஸ்ஆர் நிதி மூலம் இந்த திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதாவது, தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியை பயன்படுத்தி, இந்த திட்டங்களை நிறைவேற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளதாம்.
குறிப்பாக, பூங்காக்கள் அமைத்தல், தெருக்களை அழகுப்படுத்துதல், புதிய மரங்கள் நடுதல் போன்ற திட்டங்களுக்குதான் இந்த பட்ஜெடடில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள அய்யப்பன் கோயில் எதிரே திறந்தவெளி இடத்தை, வெஸ்ட்ரி பள்ளி மற்றும் அலெக்சாண்ட்ரியா சாலை வரை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வில்லியம்ஸ் சாலை மற்றும் தில்லை நகர் ரெட்டை வாய்க்கால் பகுதியில், சாலை ஓரங்களில் பூங்காக்கள் அமைக்க இருக்காங்க. மக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதைகள், திருச்சி சர்வதேச விமான நிலையம் - பீமா நகர் நீதிமன்றம் செல்லும் சாலையில், அடிக்கடி முக்கிய பிரமுகர்கள் சென்று வருகின்றனர். அதனால், அந்த சாலையில் பாரம்பரிய தோற்றமுடைய எல்இடி விளக்குகள் பொருத்த முடிவு செய்து இருக்காங்க.
ஏற்கனவே, திருவானைக்கோவில் சென்னை ட்ரங்க் சாலையில் உள்ள விளக்குகள் போல, இந்த விளக்குகள் இருக்குமாம். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது; "புதிய விளக்குகள் நகரத்தின் அழகை மேம்படுத்தும். அதே நேரத்தில், வெளிச்சம் ஒரே மாதிரி இருக்கும். இது பார்வையாளர்களுக்கு நல்ல தோற்றத்தை கொடுக்கும்" என்றனர். மேலும், 10,000 தெரு விளக்குகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள 20 வாட் எல்இடி விளக்குகளுக்கு பதிலாக, 40 வாட் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும். காவிரி நதிக்கரை மேம்பாட்டு திட்டத்தின் முதல் கட்டமாக, ஓடத்துறை சாலை மற்றும் அம்மா மண்டபம் பகுதிகளில் ரூ. 5 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் பஞ்சப்பூர் பளபளப்பாகும் போது சிட்டியை மட்டும் விட்டுவிடுவோமா என்பது போல் மாநகராட்சி பட்ஜெட் நகரை அழகுப்படுத்த வந்திடுச்சு. மாநகராட்சி பட்ஜெட்டில் உள்ள சில முக்கிய திட்டங்கள் பற்றி பார்ப்போம். 10,000 தெரு விளக்குகளை 20வாட்ஸ் இருந்து 40 வாட்ஸ் எல்இடி ஆக மாற்ற போறாங்க.
வில்லியம்ஸ் சாலை மற்றும் தில்லை நகரில் பூங்காக்கள் அமைக்க ரூ. 10.5 கோடி ஒதுக்கி இருக்காங்க. காவிரி நதிக்கரை மேம்பாட்டு திட்டம் (ஓடத்துறை & அம்மா மண்டபம்) – ரூ.15 கோடி, குடியிருப்பு பகுதிகளில் 3,450 புதிய எல்இடி விளக்குகள் பொருத்த ரூ.6.5 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிச்சு இருக்காங்க.
ராயல் ரோடு, கண்டோன்மென்ட் பகுதிகளில் சாலை ஓரங்களில் பொது இடங்களை மேம்படுத்துதல் ரூ.10 கோடி என்று நிதி ஒதுக்கீடு செய்து வெளியாகி உள்ள அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. திருச்சி இப்போ திரும்பும் இடமெல்லாம் அழகு திருச்சியாக மாற போகுது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

