மேலும் அறிய

Chengalpattu Rowdy: மீண்டும் என்கவுண்டர்.. செங்கல்பட்டில் பிரபல ரவுடி மீது துப்பாக்கி சூடு... நாட்டு வெடிகுண்டு ஸ்பெசலிஸ்ட் அசோக் ?

Chengalpattu Rowdy: " செங்கல்பட்டு அடுத்த ஆப்பூர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த பிரபல ரவுடியை போலீசார் சுட்டு பிடித்தனர்"

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி அசோக் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வைத்து போலீசார் சுட்டு பிடித்தனர் 

ரவுடிகள் சாம்ராஜ்யம்

சென்னை புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  செங்கல்பட்டு மாவட்டம் சென்னை புறநகர் பகுதியில் இருப்பதால், தொடர்ந்து ரவுடிகளால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. 

சென்னை புறநகர் பகுதிகளில் இருக்கும் சிறு நிறுவனங்கள், வியாபாரிகளை மையமாக வைத்து அவர்களை மிரட்டி மாமுல் வாங்குவதை, இந்த ரவுடிகள் முக்கிய வேலையாக செய்து வருகின்றனர். இதுபோக கஞ்சா விற்பது, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ரவுடிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

சிக்கி தவிக்கும் செங்கல்பட்டு

ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் காவல்துறையினர், ரவுடிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்து, சிறையில் அடைக்கும் பணியில் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி அசோக் (28). அசோக் மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறையினரால் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் அசோக் இருந்து வருகிறார். இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள ஆப்பூர் வனப்பகுதியில், பதுங்கி இருந்த அசோக்கை போலீசார் கைது செய்ய சென்றனர். அப்போது அசோக். அங்கிருந்த காவலர்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். 

போலீசாரத் துப்பாக்கி சூடு

இதனைத் தொடர்ந்து அசோக்குமார் தப்பிக்காமல் இருப்பதற்காகவும், தற்காப்பிற்காகவும் போலீசார் அசோக் கால் முட்டிக்கு கீழ் சுட்டு பிடித்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடி கொண்டிருந்த, அசோக்கை மீட்ட போலீசார் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அசோக் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அசோக்கிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது: அதிக அளவில் கஞ்சா விற்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பதுங்கி இருந்த அசோக்கை கைது செய்ய சென்றோம். அப்போதுதான் எங்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்தார்.

பிரபல ரவுடி அசோக்கின் பின்னணி என்ன ?

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் அசோக். அசோக் மீது நாட்டு வெடிகுண்டு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், திருப்போரூர் பகுதியில் இவர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் எதிர்பாராத விதத்தில், படித்ததில் அவருடைய ஒரு கண் பார்வை முற்றிலும் செயல் இழந்தது. அந்த வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்க அசோக் கற்றுக்கொண்டார். நாட்டு வெடிகுண்டு செய்வதில், கை தேர்ந்த ரவுடியாக அசோக் இருந்து வருகிறார். குட்டி ரவுடிகள் முதல் பெரிய ரவுடிகள் வரை என அனைவருக்கும் பரிச்சயமாக அசோக் இருந்து வருகிறார். பல முக்கிய கொலைகளுக்கு பின்னணியில், அசோக் செய்த நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதுமே அசோக்கை போலீசார் தங்கள் கண்காணிப்பிலே வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Embed widget