மேலும் அறிய
Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி அட்ஜெஸ்மெண்ட் பற்றி வெளிப்படையாக பேசிய பழைய வீடியோ தற்போது வரைலாகிறது.

அட்ஜெட்மென்ட் குறித்து வெளிப்படையாக கூறிய நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி
1/5

சினிமாவைப் பொறுத்த வரையில், நடிகை என்றாலே அட்ஜெஸ்மெண்ட் செய்ய வேண்டும். அப்போது தான் வாய்ப்பு கிடைக்கும் என்று எல்லோருமே சொல்கிறார்கள். அட்ஜெஸ்மெண்ட்டை செய்யாமல் தங்களின் திறமையால் ஜெயித்த பிரபலங்களும் உள்ளனர் அப்படி சினிமா மற்றும் சின்னத்திரையில் ஜெயித்த ஒருவரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
2/5

எந்த ஒரு சினிமா பின்புலமும் இன்று வெள்ளித்திரையில் அறிமுகமாக, முன்னணி நடிகை என்கிற சிம்மாசனத்தில் அமர்ந்த நயன்தாரா முதல், வெயிட்டான சினிமா பின்புலத்தோடு கதாநாயகியாக களமிறங்கி, சினிமாவில் ஹீரோயினாக ஜொலிக்க முடியாத வரலட்சுமி சரத்குமார் வரையில், பலரும் அட்ஜெஸ்மெண்ட் என்கிற வளையத்தில் சிக்கி அதை தைரியமாக எதிர்கொண்டு வந்ததை அவர்களே கூறி உள்ளனர்.
3/5

இவர்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சிலர் அட்ஜெஸ்ட்மெண்ட் என்கிற வார்த்தையை கடந்து தான் வந்துள்ளனர். இந்த நிலையில் தான் பாக்கிய லட்சுமி, கார்த்திகை தீபம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டியிடம் ரசிகர் ஒருவர் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறீர்களா? என்று வெளிப்படையாக கேட்டுள்ளார்.
4/5

இதற்க்கு மிகவும் கூலாக பதிலளித்த ரேஷ்மா, நான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ததில்லை. ஒருவேளை அப்படி செய்திருந்தேன் என்றால், இந்நேரம் எங்கேயோ போயிருப்பேன். ஆனால், நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன். என்னுடன் நடித்த நடிகருடன் நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன். ஆனால் இப்போது அந்த ரிலேஷன்ஷிப் தொடரவில்லை என கூறி உள்ளார்.
5/5

அதே போல் தன்னை ஆண்டி என்று அழைத்தால் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை . காரணம் எனக்கும் வயசு ஆகிவிட்டது. எனக்கும் ஒரு மகன் இருக்கிறான். பின்னர் ஏன் ஆண்டி என அழைத்தால் அதுபற்றி கவலைப்பட வேண்டும் என மிகவும் எதார்த்தமாக பேசியுள்ளார்.
Published at : 28 Mar 2025 11:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement