TNTET 2025: ''ஆசிரியர்களை ஏமாற்றும் அரசு'' இந்த ஆண்டும் டெட் தேர்வு கிடையாதா? குமுறும் தேர்வர்கள்!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர் பணியில் சேர முறையே ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மாநில தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட ஆண்டு அட்டவணையில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்று ஆசிரியர் பணிக்குத் தயாராகி வரும் தேர்வர்கள் தங்களின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர் பணியில் சேர முறையே ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மாநில தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான தேர்வுகளைப் நடத்தி வருகிறது. குறிப்பாக அரசுப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரிகள், சிறப்பு ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகிய பணிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
மாநில தகுதித் தேர்வு (TNSET)
அதேபோல, அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பணிகளில் சேர, மாநில தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் பணிகளில் சேர நடத்தப்படும் தேர்வு விவரங்கள், அதற்கான அறிவிக்கைகள், அறிவிக்கை, தேர்வு நடைபெறும் தேதி ஆகியவை வெளியிடப்படும்.
இதற்கிடையே ஆசிரியர் தேர்வு வாரியம் 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை அண்மையில் வெளியிட்டது. இதில், 7,735 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
7,735 பணியிடங்களை நிரப்ப ஆண்டு அட்டவணை
அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இணை பேராசிரியர், உதவி நூலகர், உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் 232 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. சட்ட உதவி பேராசிரியர், சட்ட இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் மே மாதம் நடைபெற உள்ளன. இந்தத் தேர்வின் மூலம் 132 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 4000 பணி இடங்களுக்கான தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதேபோல, சிஎம்ஆர்எஃப் (CMRF) எனப்படும் முதலமைச்சருக்கான ஆய்வு உதவித்தொகைக்கான தேர்வு குறித்த அறிவிக்கை, ஜூன் மாதம் வெளியிடப்பட உள்ளது. இதன்மூலம் 180 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான 1205 பணி இடங்களுக்கான தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெற உள்ளன. அதேபோல வட்டாரக் கல்வி அலுவலருக்கான பணியிடங்கள் 51 ஆக அறிவிக்கப்பட்டு உள்ளன. 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) அறிவிப்பு இல்லை
எனினும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடைபெறும் என்பன குறித்த விவரங்கள் இந்த அட்டவணையில் வெளியாகவில்லை.
ஆண்டுதோறும் 2 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டிய நிலையில், கடைசியாகத் தமிழ்நாட்டில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெட் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 2 ஆண்டுகாலமாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.
அறிவிப்பு என்னவானது?
முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிக்கையில் 2024 ஜூலை மாதம் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
எதிர்பாராத விதமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்பக் காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல், தகுதித் தேர்வு தள்ளி வைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் தேர்வு இதுவரை நடத்தப்படவில்லை. 2024 முடிந்து 2025 தொடங்கிவிட்டது. புத்தாண்டின் முதல் மாதம் விரைவில் முடிய உள்ள நிலையில், இன்னும் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in/
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

