Ajith Vs Vijay: விஜய்க்கு எதிராக அஜித்துக்கு பத்மபூஷன் விருது? பின்னணியில் அரசியல் ?
அரசியலில் களமிறங்கி மத்திய மற்றும் மாநில அரசுகளை விமர்சித்து வரும் விஜய்க்கு எதிராக தான் இப்போது அஜித்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளதாக சில பேச்சுகள் அடிபட்டு வருகிறது.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆண்டுக்கான பத்மபூஷன் விருது நடிகர் அஜித் குமார் உள்பட மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்ம விருது அறிவித்த குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி. நாட்டிற்காக பங்களிப்பு செய்ததற்காக தனக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் என்னுடைய அப்பா இருந்திருந்தால் இன்னும் கூடுதலாக மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் தாயார், மனைவி, குழந்தைகள், ரசிகர்கள், என அனைவரையும் தன்னுடைய அறிக்கையில் நினைவு கூர்ந்தார்.
அஜித்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது விஜய் ரசிகர்களுக்கு ஒருபுறம் சந்தோஷமே என்றாலும் மறுபுறம் விஜய் மீது விமர்சனம் எழுவதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. ஒருநடிகராக விஜய் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்திருந்தாலும் கூட அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பு காரணமாக அதிரடியாக தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, அரசியல் பிரவேசத்தை தொடங்க உள்ளதாக அறிவித்தார்.
மேலும், விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டையும் நடத்தி மத்திய மற்றும் மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். பாஜாக கட்சினருக்கும், தளபதியின் தவெக கட்சினருக்கும் அடிக்கடி வார்த்தை போர் நடந்து வருவதையும் பார்க்க முடிகிறது. அதே போல் விஜய்யை வெறுப்பேற்றுவதற்காகவே அஜித் என்ன செய்தாலும், அதை ட்ரெண்ட் செய்வதையும் ஒரு அரசியலாக செய்து வருகிறது திமுக கட்சி.
சமீபத்தில் பரந்தூர் சென்ற விஜய் விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மனக் குமுறலை வெளிப்படுத்தினார். மேலும் இத்தனை ஆண்டுகாலம் சினிமாவில் எத்தனையோ வெற்றி தோல்வி படங்களை கொடுத்த... அஜித்துக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் என்று எந்த விருதையும் மத்திய அரசு அறிவிக்காத நிலையில், ஒருநாள் அவர் கார் ரேஸில் வெற்றி பெற்றதை வைத்து மட்டும் எப்படி விருது வழங்க முடியும்? அதுவும் அவர் இந்தியா சார்பில் கலந்து கொள்ள விலை. ஒரு தனிப்பட்ட நடிகராக கலந்து கொண்டு ஜெயிச்சிருக்கிறார் என்பதும் குறிபிடத்தக்கது.
அப்படியிருக்கும் போது அவருக்கு திடீரென்று விருது வழங்கப்பட என்ன காரணம் என்று யோசிக்கும் போது, முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே காரணமாக இருக்க முடியும் என்பது சிலரின் வாதம். அதுவும் விஜய்க்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இது போன்று ஒரு செயலை செய்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்கள் தங்களின் கருத்தாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

