மேலும் அறிய

தூத்துக்குடி துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்ட 10 கோடி மதிப்பிலான செம்மரம் பறிமுதல்

’’செம்மரங்களை வெளிநாடுகளுக்கு கண்டெய்னரில் சரக்குகளுக்கு இடையே பதுக்கி வெளிநாடுகளுக்கு கடத்த திட்டம்’’

தூத்துக்குடி வழியாக வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தல், செம்மரக்கட்டைகள் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, சுங்கத்துறை மற்றும் அனைத்து உளவுப் பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் போலீசாரும் தீவிரமாக வாகன தணிக்கை மற்றும் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்ட 10 கோடி மதிப்பிலான செம்மரம் பறிமுதல்
 
இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி பகுதியில் ராகேஷ் என்பவருக்கு சொந்தமான ஹரிபாலகிருஷ்ணா  குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் கண்காணிப்பாளர் சந்தீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவரது தலைமையிலான போலீசார் அந்த குடோனுக்கு சென்றனர். அங்கு ஒரு டாரஸ் லாரியில் தார்ப்பாயால் மூடப்பட்ட நிலையில் சரக்கு ஏற்றப்பட்டு இருந்தது. அதனை திறந்து பார்த்தபோது அதில் சுமார் 5 அடி நீளம் கொண்ட செம்மரக்கட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதில் சுமார் 20 டன் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு  10 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்ட 10 கோடி மதிப்பிலான செம்மரம் பறிமுதல்
 
செம்மரங்கள் ஆந்திரா மாநிலம் கடப்பா, சித்தூர் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. அதே போன்று இலங்கை, பாகிஸ்தான, நேபாளம் ஆகிய நாடுகளிலும் வளர்கிறது. இது 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இந்த செம்மரங்களுக்கு சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. செம்மரங்கள் சித்த மருத்துவத்தில் நீண்ட வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரும வியாதிகள், மூலம், சர்க்கரை பாதிப்பு, கை கால் மூட்டு வீக்கம், விஷக்கடிகள், பாக்டீரியா, மற்றும் புற்று நோய் ஆகிய நோய்களுக்கு செம்மரத்தில் இருந்து மருந்துகள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும் செம்மரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உண்டு. ஜப்பான் நாட்டில் திருமணமான பெண் புகுந்த வீட்டுக்கு போகும்போது, ஒருவித இசைக்கருவியை எடுத்துச் செல்வது வழக்கம். இந்த இசைக்கருவியை தயார் செய்ய செம்மரம் பயன்படுத்தப்படுகிறது. இதேமாதிரி ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் ஒயின்களில் செம்மரத் தூள் பயன்படுத்தப்படுகிறது. இது ஒயின்களில் நிறத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. ஜப்பானில் இந்த மரத்தால் உருவாக்கப்படும் வீடுகள் யுரேனியம் கதிர்வீச்சை தடுப்பதாக பயன்படுத்தப்படுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால், அறிவியல் ரீதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. பொதுவாக செம்மரம் மருத்துவ குணங்கள் கொண்டது. தமிழகத்தில் பல வருடங்களுக்கு முன்பு மரப்பாச்சி பொம்மைகள் செம்மரங்களில் செய்து விற்கப்பட்டன. குழந்தைகள் இதை தொட்டு, நுகர்ந்து விளையாடும்போது அதன் மருத்துவ பலன்கள் கிடைக்கும். இந்த மரங்கள் தற்போது வேமாக அழிந்து வருவதால் பாதுகாக்கப்பட்ட மரமாக அறிவிக்கப்பட்டு அரசால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்ட 10 கோடி மதிப்பிலான செம்மரம் பறிமுதல்
 
இதனால் ஆந்திராவில் இருந்து செம்மரங்கள் தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த செம்மரங்களை வெளிநாடுகளுக்கு கண்டெய்னரில் சரக்குகளுக்கு இடையே பதுக்கி கடத்துவதற்காக வைத்து இருந்து இருக்கலாம் என்ற அடிப்படையில் இது தொடர்பாக குடோனில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக குடோனின் உரிமையாளரான தூத்துக்குடியை சேர்ந்த ராகேஷ், லாரி உரிமையாளரான தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ் உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து செம்மரக்கட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Embed widget