மேலும் அறிய

உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்

டெல்லியில் உடலுறவில் திருப்திப்படுத்தாத கணவனை மனைவி கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாக திருமணத்தை மீறிய உறவுகளும், அதனால் ஏற்படும் கொலை மற்றும் தற்கொலை சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வரும் நிலையில், உடலுறவில் திருப்திப்படுத்தாத காரணத்தால் மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த கணவன்:

டெல்லியைச் சேர்ந்தவர் முகமது ஷாகித் என்ற இர்ஃபான். இவரது மனைவி ஃபர்சானா கான். இவர்கள் இருவருக்கும் திருமணம்  ஆகி சில ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஷாகித் சுயநினைவில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

கொலை செய்த மனைவி:

பின்னர், ஷாகித்தின் மரணம் தொடர்பாக அவரது சகோதரர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் விசாரணையில் ஷாகித்தின் மனைவி ஃபர்சானா அவருக்கு அதிக கடன் இருந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனாலும், அவரது உடலில் சில காயங்கள் இருந்தது தெரிய வந்தது.


உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்

இதையடுத்து, போலீசார் அவரிடம் விசாரணையைத் தொடர்ந்தனர். மேலும், பிரேத பரிசோதனையிலும் ஷாகித் தற்கொலை செய்துகொள்ளவில்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்தது. ஃபர்சானாவின் செல்போனை பரிசோதனை செய்த போலீசாருக்கு பல அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது, தூக்க மாத்திரை பயன்படுத்தி கொலை செய்வது எப்படி? என்பதை அவர் இணையத்தில் தேடியுள்ளார். மேலும், உரையாடல்களை அழிப்பது எப்படி என்றும் இணையத்தில் தேடியுள்ளார். 

உடலுறவில் திருப்தி இல்லை:

பின்னர், ஷாகித்தின் உடலில் இருந்த காயம் குறித்து கேள்வி கேட்டதற்கு அவர் தன்னைத் தானே தாக்கிக் கொண்டதால் உண்டான காயம் அது என்று கூறினார். இதையடுத்து, காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறினார். 


உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்

கொலை செய்யப்பட்ட ஷாகித்திற்கு இணையத்தில் சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், அவருக்கு ஏராளமான கடன் இருந்துள்ளது. மேலும், ஷாகித் திருமணத்திற்கு பிறகு ஃபர்சானாவை உடலுறவில் போதியளவு திருப்திபடுத்தவில்லை. ஷாகித் - ஃபர்சானா ஜோடி தொடக்கத்தில் உத்தரபிரதேசத்தின் பேரேலியில் வசித்து வந்துள்ளனர். அப்போது, ஷாகித்தின் உறவினருடன் ஃபர்சானாவிற்கு தொடர்பு உண்டாகியுள்ளது. அந்த தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

உள்ளே தள்ளிய போலீஸ்:

இந்த நிலையில், கணவனின் கடன் தொல்லை, உடலுறவில் திருப்திப்படுத்தாமை, கள்ளக்காதல் போன்ற காரணங்களால் அவரைத் தீர்த்துக்கட்ட ஃபர்சானா முடிவு செய்துள்ளார். இதையடுத்து, அவரை கொலை செய்து இதை தற்கொலை என்று திசை திருப்ப ஃபர்சானா நாடகம் நடித்துள்ளார். இந்த உண்மைகளை அவரே போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துள்ளார். ஆனால், போலீசார் விசாரணையில் அனைத்து உண்மையும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஃபர்சானாவை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget