மேலும் அறிய

தஞ்சையில் களைகட்டிய பூ வியாபாரம்... விலை அதிகரித்தாலும் அசராமல் வாங்கிய மக்கள்!

தஞ்சை பூச்சந்தைக்கு ஓசூர், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

 ஆயுதபூஜையை ஒட்டி தஞ்சையில் உள்ள பூச்சந்தையில் மக்களின் வரத்து அதிகளவில் இருந்தது. மேலும் ஆயுதபூஜை விழாவையொட்டி தஞ்சையில் பூக்கள் விலை உச்சத்தை தொட்டு இருந்தது. இருப்பினும் மக்கள் விலை உயர்வை கண்டுக்கொள்ளாமல் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி சென்றனர்.

தமிழகம் முழுவதும்  ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை மாநகரில் வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் ஸ்டோா்ஸ், வாகனப் பணிமனை கூடங்கள், லாரி பட்டறைகளை சுத்தம் செய்யும் நேற்று நடந்தது. இன்று காலை முதல் வாடிக்கையாளர்கள், நண்பர்கள், உறவினர்களை அழைத்து உற்சாகமாக ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

ஆயுதபூஜையில் இடம் பெறும் பொரிகடலை, வெல்லம், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் நேற்று முதல் களைக்கட்டத் தொடங்கியது. அதுமட்டுமின்றி வீடுகளில் பூஜை செய்வதுடன், வாகனங்களுக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்யப்படும். இதனால் பூஜை பொருட்கள் வாங்குவதற்கும் மக்கள் ஆர்வம் காட்டினர்.

ஆயுதபூஜையையொட்டி தஞ்சை மாநகரில் பூக்களின் விலை உச்சத்தை தொடத்தது. தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள பூச்சந்தையில் பூக்கள் வாங்குவதற்காக மக்கள் நேற்று முதல் குவிந்தனர்.  இதனால் பூக்களின் விலையும் அதிகரித்து இருந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகைப்பூ, முல்லைப்பூ தலா ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று விலை உயர்ந்து ஒரு கிலோ மல்லிகைப்பூ, முல்லைப்பூ தலா ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் மற்ற பூக்களின் விலையும் அதிகரித்து இருந்தது. ரூ.150-க்கு விற்ற செவ்வந்திப்பூ ரூ.300-க்கும், ரூ.150-க்கு விற்ற அரளிப்பூ ரூ.500-க்கும், ரூ.300-க்கு விற்ற ஜாதிமல்லி ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கனகாம்பரம் ரூ.300-க்கும், சம்மங்கி ரூ.400-க்கும், கோழிக்கொண்டை ரூ.100-க்கும், ஆப்பிள்ரோஸ் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கி சென்றனர்.

இதனால் பூக்கள் வியாபாரமும் ஜோராக நடைபெற்றது. இது குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், தஞ்சை பூச்சந்தைக்கு ஓசூர், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பூச்செடிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பூக்கள் வரத்து குறைவாகவே இருக்கிறது. விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். நல்ல வருமானமும் எங்களுக்கு கிடைத்தது என்றனர். இதேபோல் இன்று மதியம் வரை வாழைக்கன்று, தோரணம், எலுமிச்சைப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றின் விற்பனையும் அமோகமாக இருந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், விலை கூடுதலாக இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்த ஆயுத பூஜை விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதனால் விலையை பற்றி கவலைப்படாமல் ஆண்டு முழுவதும் வருமானம் அளிக்கும் தொழில்கள் மேலும் வளர்ச்சி பெற வேண்டிக் கொண்டு சிறப்பாக கொண்டாடினோம் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy”என்ன தான் இருந்தாலும் நண்பன்”மஸ்க் குறித்து ட்ரம்ப் உருக்கம் முடிவுக்கு வரும் மோதல்? Donald Trump vs Elon Muskவிஜய் பற்றவைத்த நெருப்பு! குடைச்சல் கொடுக்கும் கூட்டணியினர்! தலைவலியில் திமுக, அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...
AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...
Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
Embed widget