கைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy
தவெக தலைவர் விஜய் 2 கிராம் தங்கம் கொடுத்தா பெற்ற குழந்தைகளை ஒரு கூத்தாடியை கட்டி பிடிக்க வைத்து முத்தம் கொடுக்க வைப்பீங்களா என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆபாசமாக பேசியதற்கு தவெக-வினர் புகார் தெரிவித்த நிலையில் புகாரை ஏற்ற தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் வேல்முருகன் மீது போக்சோ வழக்கு போட்டு அதிரடி காட்டியுள்ளது.
தவெக தலைவர் விஜய் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை மாவட்டவாரியாக அழைத்து அவர்களை கெளரவித்து பரிசுகள் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் விஜய் மாணவர்களை சந்தித்து பரிசுகளை வழங்கி வழகினார். அப்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அன்பின் மிகுதியால் விஜயை கட்டித்தழுவுவது, முத்தம் கொடுப்பது அண்ணா என்று அழைத்து தோள் மீது கைகளை போட்டுக்கொண்டு புகைப்படங்கள் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வைரலாகும்.
இச்சூழலில் தான் விஜயின் மாணவர்கள் சந்திப்பை ஆபாசமாக விமர்சனம் செய்தார்....தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு கிராம் பரிசு கொடுத்த உடனே.. பெத்தவங்க ஒரு வயசு பொண்ண கூட்டிட்டு போறாங்க. இன்னும் ஓரிரு மாசத்துல பிளஸ் டூ முடிச்சு, டிகிரி முடிக்க போற கல்லூரி பெண்களை கூட்டிட்டு போறாங்க.. அறிவு வேண்டாம் தமிழனுக்கு. பெத்து வளத்து ஆளாக்கிய பொண்ண... நாளைக்கு மாற்றான் மனைவியாக வழ வேண்டிய ஒரு பொண்ணு..அப்பா, அம்மா, ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் இருக்கும்போது.. ஒரு சினிமா கூத்தாடி பயல கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்க அனுமதிக்கிறாங்க. இது என்ன ஈனப்பிறவி. தமிழனுடைய பிறவியா இது. அப்படியே விஜய் அண்ணான்னு சொல்றாங்க.. விஜய் நடிப்பதை ரசிங்க, நடிச்சா பாராட்டுங்க.. ஆனால் இப்படிலாம் செய்யக் கூடாது என்று பேசினார் இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இந்தநிலையில் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்ய சோழன் என்பவர் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு இணையதளம் வாயிலாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தமிழக ஆளுநர், தமிழக சபாநாயகர் ஆகியோருக்கும் பதிவு தபால் மூலமாக வேல்முருகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.





















