மேலும் அறிய

ஸ்மார்ட் சிட்டியாக மாறும் காஞ்சிபுரம்.. வீடுதோறும் குடிநீருக்கு மீட்டர் பொருத்தம்.. ரூ.318 கோடியில் திட்டம்

காஞ்சிபுரத்தில் 318 கோடி ரூபாயில் புதிய குடிநீர் திட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. வீடுதோறும் குடிநீருக்கு மீட்டர் வைத்து கட்டணம் வசூலிக்க முடிவு.

சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய காஞ்சிபுரம் மிக முக்கிய நகரமாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் தற்போது 51 வார்டுகள் உள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சியில், முறையாக குடிநீர் விநியோகம் நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி பொருத்தவரை, தற்போதைய சூழலில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள் தொகை

காஞ்சிபுரம் மாநகராட்சியை பொருத்தவரை நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு தினமும் 23 பில்லியன் லிட்டர் நீர் கிடைப்பதால், சராசரியாக 90 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்க முடிகிறது. இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இதனை சரி செய்ய விதமாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல இடங்களில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல இடங்களில் முறையாக குடிநீர் வருவதில்லை என்று குற்றச்சாட்டும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் இந்த பிரச்சனை இருக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியின் மக்கள் தொகை பல மடங்கு அதிகரிக்க உள்ளது. 

காஞ்சிபுரம் மாநகராட்சி குடிநீர் ஆதாரம் 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு திருப்பாற்கடல் மற்றும் கோரிக்கை ஆகிய இரு பாலாறு திட்டங்கள் வாயிலாக குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவை போதுமானதாக இருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது. 

இன்னும் 10 ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் மாநகராட்சியாக உருவெடுக்கும். அப்போது காஞ்சிபுரம் மாநகராட்சியின் குடிநீர் தேவை 59 மில்லியன் லிட்டராக இருக்கும் என அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர். 

318 கோடி ரூபாய் மதிப்பீடு 

எதிர்வரும் காலத்தை கருத்தில் கொண்டு 318 கோடி ரூபாயில் குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மூன்று குடிநீர் சேகரிப்புக்குணர்கள், 5 ஆழ்துளை கிணறுகள், 6 நீர் உறிஞ்சு கிணறுகள், 431 கிலோமீட்டர் பகிர்மான குழாய்கள், 14 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரதான குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. 

காஞ்சிபுரம் மாநகராட்சி பொருத்தவரை தற்போது குடியிருப்பு மற்றும் வணிக ரீதியாக 32,687 குடிநீர் இணைப்புகள். இவை 55 ஆயிரம் குடிநீர் இணைப்புகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 94 குடிநீர் தொட்டிகள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 14 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. 

வீடுதோறும் குடிநீர் மீட்டர் 

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், வீடு தோறும் குடிநீர் இணைப்பு வழங்கி மின்சாரத்திற்கு போல் குடிநீருக்கும் மீட்டர் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயன்படுத்தும் நீரின் அளவிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்துப் பணிகளும் முடிந்து 2027க்குள் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget