மேலும் அறிய

Chinnaswamy Stadium: மூடப்படும் சின்னசாமி மைதானம்? இனி கிரிக்கெட் போட்டிகள் கிடையாது - ஷாக் தந்த சித்தராமையா

கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்று சித்தராமையா கூறியிருப்பதால் சின்னசாமி மைதானத்தில் இனி போட்டிகள் நடத்தப்படாது என்று மறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஆர்சிபி அணி பஞ்சாபை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. ஆர்சிபி வெற்றியை கொண்டாடும் விதமாக பெங்களூரில் நடந்த பாராட்டு விழாவில் சின்னசாமி மைதானத்தின் வெளியே 11 அப்பாவி ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 

சின்னசாமி மைதானத்திற்கு குட்பை:

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஆர்சிபி நிர்வாகிகள் உள்பட பலரையும் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நிலையில், இனி ஐபிஎல் தொடரில் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படாது என்று தகவல்கள் வெளியாகியது. 

இதுதொடர்பாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அரசு ஆலோசிக்கும். இதுபோன்ற விரும்பத்தக்காத சம்பவம் எந்த அரசாங்கத்தின் கீழும் நடக்கக்கூடாது. தனிப்பட்ட முறையில் இந்த சம்பவம் என்னையும் எனது அரசாங்கத்தையும் மிகவும் காயப்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

இனி ஐபிஎல் போட்டிகள் எங்கே?

இதன்மூலம் அடுத்த சீசன் முதல் ஐபிஎல் தொடரின் போட்டிகள் இனி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறாது என்றே கருதப்படுகிறது. நாடு முழுவதும் பெரும் சோகத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ள நிலையில், சின்னசாமி மைதானம் நகரத்தின் மையப்பகுதியில் இருந்ததும், அதன் பரப்பளவிற்கு அதிகமான அளவில் மக்கள் குவிந்ததுமே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

சித்தராமையா பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இனி போட்டிகள் நடைபெறாது என்பதை மறைமுகமாக சித்தராமையா கூறியுள்ள நிலையில், இனி போட்டிகள் எங்கு நடத்தப்படும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடகாவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் துமுகூரில் கட்டப்பட்டு வருகிறது. அது கட்டி முடிக்க இன்னும் ஓராண்டு ஆகும் என்று கூறப்படுகிறது. 

முடிவுக்கு வரும் சகாப்தம்:

வெறும் 35 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அமரும் வசதி கொண்ட பெங்களூர் சின்னசாமி மைதானத்தால் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும்போதும் கடும் போக்குவரத்து நெரிசலும், சிரமமும் ஏற்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்துவது அந்த நகர போலீசாருக்கு சிரமமாக இருப்பதுடன், போட்டி நடைபெறும் நாளில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். 

பெங்களூர் நகரத்தின் ஒரு அங்கமாகவே திகழ்ந்து வரும் சின்னசாமி மைதானம் 1969ம் ஆண்டு  கட்டப்பட்டது. 1974ம் ஆண்டு முதன்முதலில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. அது முதல் இதுவரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் உள்பட 500க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடத்தப்பட்ட ஒவ்வொரு முறையும் சின்னசாமி மைதானத்தில் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 

சித்தராமையாவின் அறிவிப்பால் சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது என்று தெரியவந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE
Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Embed widget