மேலும் அறிய

Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்

Bank Cuts Lending Rates: ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததை தொடர்ந்து, பல்வேறு வங்கிகளும் தங்களது கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

Bank Cuts Lending Rates: வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்ததால், வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன் பெற்றோர்களுக்கான கடன் சுமை வெகுவாக குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வட்டியை குறைத்த வங்கிகள்:

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டிவிகிதத்தை 0.5 சதவிகிதம் குறைத்து கடந்த வாரம் அறிவித்தது. அதனடிப்படையில் பொதுத்துறை கடன் வழங்குநர் தலைமையிலான வங்கிகள், தாங்கள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. இதனடிப்படையில் புதியதாக கடன் வாங்குபவர்களை காட்டிலும், ஏற்கனவே கடன் வாங்கியிருப்பவர்கள் அதிக பலன் அடையக்கூடும் என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். காரணம், சந்தைப் பங்கில் போட்டித்தன்மை மிக்க, வீட்டுக் கடன் பிரிவை பரவலாக்க வங்கிகள் விரும்புவதே ஆகும்.

எந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி மாற்றம்?

  • ரெப்போ உடன் இணைக்கப்பட்ட கடன் (RLLR) விகிதத்திற்கான 50 அடிப்படை புள்ளிகளை குறைத்து பாங்க் ஆஃப் பரோடா அறிவித்துள்ளது. அதன்படி, இந்த கடனுக்கான விகிதம் இப்போது 8.15 சதவிகிதம் உள்ளது. இந்த விதி கடந்த 7ம் தேதி முதலே அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பஞ்சாப் நேஷனல் வங்கியும் ரெப்போ உடன் இணைக்கப்பட்ட கடன் விகிதத்திற்கான 50 அடிப்படை புள்ளிகளை குறைத்து, வட்டி விகிதத்தை 8.35% ஆக திருத்தியுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது
  • பேங்க் ஆஃப் இந்தியாவும் ரெப்போ உடன் இணைக்கப்பட்ட கடன் விகிதத்திற்கான 50 அடிப்படை புள்ளிகளை குறைத்து, வட்டி விகிதத்தை 8.35% ஆக திருத்தியுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த 6ம் தேதி முதல் பின்பற்றப்படுகிறது
  • UCO வங்கியும் தங்களது வட்டி விகிதத்தை 8.3% ஆக குறைத்துள்ளது.
  • அதேநேரம், HDFC வங்கியானது MCLR  எனப்படும் நிதிசார்ந்த கடன் விகித வரம்பினை 10 புள்ளிகள் குறைத்து 8.9% ஆக நிர்ணயித்துள்ளது

வட்டி குறைப்பு - யாருக்கு பலன்?

ரெப்போ ரேட் அடிப்படையில் ஃப்ளோட்டிங் வட்டி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதியாகும். அதன்படி, ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கான வட்டி விகிதம் தானாகவே குறையும். இதன் பலனை புதியதாக கடன் வாங்குவபவர்களால் முழுமையாக பெறமுடியாது. வங்கிகள் லாப வரம்புகளைப் பாதுகாக்க ரெப்போ விகிதத்தில் வசூலிக்கும் பரவலை சரிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு பேங்க் ஆஃப் பரோடாவில் புதிய கடனாளிகளுக்கு 8% வட்டியில் வீட்டுக் கடன் வழங்கப்படும். அதேநேரம், லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள, வங்கிகள் நிலையான வைப்புத்தொகை மீதான வருமானத்தைக் குறைக்கும், குறிப்பாக அமைப்பில் புதிய பணப்புழக்கம் செலுத்தப்படுவதால் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சேமிப்பாளர்களுக்கு FD-கள் மீதான ஆர்வத்தை குறைக்கும்.

பழைய பயனர்கள் பலன் பெறுவது எப்படி?

புதிய கடன் வாங்குபவர்களை விட பழைய கடன் வாங்குபவர்கள் அதிகம் பயனடைவதற்கான காரணம், வீட்டுக் கடன்பிரிவில் நிலவும் கடுமையான போட்டியாகும். குறிப்பாக சந்தையில் முன்னணியில் இருப்பவர்களுக்கு சவால் விடும் வகையில் பல கடன் வழங்குநர்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறார்கள். பொதுத்துறை வங்கிகளில், பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை வட்டி விகிதக் குறைப்புக்கு முன்பே ரூ.30 லட்சம் வரை 7.85% வட்டியில் கடன்களை வழங்கி வந்தன. கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும்  யூகோ வங்கி ஆகியவை வீட்டுக் கடன்களை 7.90% வட்டியில் வழங்கி வந்தன. 

தனியார் வங்கிகளின் வட்டி விகிதம்:

கடந்த வாரம் வரை, சவுத் இந்தியன் வங்கி தனியார் கடன் வழங்குநர்களிடையே மிகக் குறைந்த வட்டி விகிதத்தை, அதாவது ரூ.30 லட்சம் வரையிலான கடன்களுக்கு 8.30% ஆகக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து கரூர் வைஸ்யா வங்கி 8.45% ஆகவும், பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி 8.50% ஆகவும் வழங்கின. பந்தன் வங்கி, ஆக்சிஸ் வங்கி வங்கி 8.50% ஆகவும் வழங்கின. பந்தன் வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கர்நாடகா வங்கி ஆகியவை முறையே 8.66%, 8.75% மற்றும் 8..78% வட்டி விகிதங்களைக் கொண்டிருந்தன.

ரூ.37 ஆயிரம் வரை மிச்சம்:

ரெப்போ ரேட்டுடன் தொடர்புடைய கடனில் ரூ.1 கோடி வரை கடன் வாங்கியவர்கள், வட்டி குறைப்பால் ஆண்டுக்கு 37 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம் என துறைசார் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். ரெப்போ ரேட் அடிப்படையிலான கடனில் இல்லாதவர்கள் தங்களது, கடனை நடைமுறை கட்டணத்தை செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். அதேநேரம், ரெப்போ ரேட் விகிதம் குறைந்ததால், சேமிப்பு இரட்டிப்பாவதற்கான காலம் 7 மாதங்கள் வரை அதிகரிக்கலாம். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget