மேலும் அறிய

UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?

UP Govt Kumbh Stampede: மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டை, 4 மாதங்கள் ஆகியும் வழங்காத உத்தரபிரதேச அரசை நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

UP Govt Kumbh Stampede: மாநில அரசு தான் மக்களின் அறங்காவலர் என்று அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீதிமன்றத்தை நாடிய கணவர்:

பீகாரைச் சேர்ந்த உதய் பிரதாப் சிங் என்பவரின் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி தனது மனைவி உயிரிழந்து 4 மாதங்களாகியும், உத்தரபிரதேச அரசு தற்போது வரை இழப்பீடு வழங்கவில்லை என  அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், “ மனைவி கூட்ட நெரிசலில் இறந்தது குறித்து கணவருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், உடல் மனுதாரரின் மகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடல் மருத்துவமனையில் இருந்து வந்ததா அல்லது நேரடியாகக் கொண்டு வரப்பட்டதா, அல்லது உரிமை கோரப்படாமல் கிடந்ததா என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. உடல் பிணவறைக்கு வெளியே ஒப்படைக்கப்பட்டது, ஆனால் பிரேத பரிசோதனை செய்ததற்கான எந்த தகவல்களும் வழங்கப்படவில்லை” என உத்தரபிரதேச அரசை நீதிமன்றம் கடுமையாக சாடினர்.

அரசின் முடிவு என்ன?

மேலும், ”விரும்பத்தகாத சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டிருந்தால், அது அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பயனளித்து இழப்பீடு வழங்க வேண்டும். மனுதாரருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து முடிவு செய்து பதிலளிக்குமாறு உத்தரபிரதேச அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு, ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மொத்த பலி எண்ணிக்கை எவ்வளவு?

கும்பமேளாவில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை தொடர்பாக பிபிசி இந்தி நாளிதழ் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, “ஜனவரி 29ம் தேதியன்று கும்பமேளாவில் ஏற்பட்ட 4 கூட்ட நெரிசல் நிகழ்வுகளில் 82 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம், ஆனால் அரசு தரப்பில் பலி எண்ணிக்கை 37 என மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அங்கீகரித்த பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மட்டும் ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. அதுபோக மேலும் குறைந்தது 26 குடும்பங்களுக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.

கட்டாய கையொப்பம்:

மாறாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பலியானதாக குறிப்பிடப்பட்ட ஆவணங்களில் கையொப்பம் வாங்கியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் 19 குடும்பத்தினருக்கு தற்போது வரை எந்தவித நிதியுதவியும் வழங்கப்படவில்லை. இதுபோக கும்பமேளாவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 37 பேரின் விவரங்களை உத்தரபிரதேச அரசு தற்போது வரை வெளியிடவில்லை.” என பிசிசி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ் விமர்சனம்:

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் பேசுகையில், “உத்தரபிரதேச அரசு இறப்பு எண்ணிக்கை குறித்து பொய் சொல்கிறது. தவறான புள்ளிவிவரங்களை வழங்குபவர்கள் பொதுமக்களின் நம்பிக்கைக்கு தகுதியானவர்கள் அல்ல” என்றார். மேலும் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இழப்பீடு ஏன் ரொக்கமாக வழங்கப்பட்டது? பணம் எங்கிருந்து வந்தது? விநியோகிக்கப்படாத பணம் எங்கே போனது? எந்த விதியின் கீழ் பண விநியோகம் அங்கீகரிக்கப்பட்டது? ரொக்கப் பணம் செலுத்துவதற்கு யார் அங்கீகாரம் அளித்தனர்? பணம் செலுத்துவதற்கு ஆதரவாக ஏதேனும் எழுத்துப்பூர்வ உத்தரவு உள்ளதா?” என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, மாநில அரசுகளுக்கான ரோல் மாடலாக திகழ்வதாக மோடி கூறியிருந்த நிலையில், இதுதான் அந்த ரோல் மாடலா என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Musk on World War: “இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
“இன்னும் 5 ஆண்டுகளில் உலகப் போர் நடக்கும்“; எதிர்பார்ப்பை கிளப்பிய எலான் மஸ்க்கின் பதிவு
Embed widget